இரத்தினபுரி – மஹாவலதென்னவின் கஜுவத்த பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
23ஆம் திகதி முதல் அந்தச் சிறுமி காணாமல் போனதாக அவரது தந்தை பலாங்கொடை காவல்நிலையத்தில் முறைப்பாடளித்திருந்தாக தெரியவருகிறது.
இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர், பலாங்கொடை மஹாவலதென்னவைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஆவார்.
மரணத்திற்கான காரணம்
எவ்வாறாயினும், குறித்த மரணம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான பிரேதப் பரிசோதனை இன்று (25) பலாங்கொடை வைத்தியசாலையில் நடைபெற உள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

