Last Updated:
சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும், வன்முறைப் போக்குகளைத் தடுப்பதற்காகவும், சுகாதாரத்தைப் பேணவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் துணை முதலமைச்சர் விஜய் சின்ஹா.
பிகாரில் கல்வி நிறுவனங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் இறைச்சி விற்க மாநில அரசு தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள பிகார் துணை முதலமைச்சர் விஜய் சின்ஹா, கல்வி நிறுவனங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், வழிபாட்டு தலங்களுக்கு அருகே இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை விற்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளிடையே சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும், வன்முறைப் போக்குகளைத் தடுப்பதற்காகவும், சுகாதாரத்தைப் பேணவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இறைச்சி
நகர்ப்புற மேம்பாட்டுத் துறையுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் கல்வித் துறை அமைச்சரான மதன் திலவர், குழந்தைகள் சுறுசுறுப்பானவர்களாகவும், அறிவார்ந்தவர்களாகவும் இருக்க நாட்டு மாட்டு பால் குடிக்க வேண்டும் என்றும், எருமைப் பால் குடித்தால் குழந்தைகளின் அறிவு கெட்டுவிடும் என்றும் கூறியிருக்கிறார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிகார் அரசின் உத்தரவையும், ராஜஸ்தான் மாநில அமைச்சரின் சர்ச்சை கருத்தையும் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ளன.
Feb 24, 2026 12:55 PM IST


