Last Updated:
கணவனின் சடலத்தின் அருகே அதிர்ச்சியில் உறைந்த முகத்துடன் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் இந்த தாக்குதலின் கொடூரத்தை உணர்த்துகிறது.
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலின் கோர பின்னணியை விவரிக்கும் புகைப்படத்தில் இருக்கும் நபர்களின் விவரங்கள் தெரியவந்துள்ளது.
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற நொடிகளை பாதிக்கப்பட்டவர்களின் மனைவிகளும், மகள்களும் நடுக்கத்துடன் விவரித்துள்ளனர். காஷ்மீரின் பஹல்காமில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பைசரன் பகுதி. பனி சூழ்ந்த மலை, உயரமான மரங்கள் என இப்பகுதியின் இதமான சூழலை சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்கிழமை மதியம் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் ஒவ்வொருவரையாக பிடித்து சுட்டுக் கொல்லத் தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் அலறினர். ஒட்டுமொத்த தேசத்தையும் இந்த சம்பவம் உலுக்கியுள்ளது. மொத்தம் 28 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலும் சுற்றுலா பயணிகளை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த கொடூர சம்பவத்தை விவரிக்கும் வகையில் ஒரு புகைப்படம் வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கணவனின் சடலத்தின் அருகே அதிர்ச்சியில் உறைந்த முகத்துடன் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் இந்த தாக்குதலின் கொடூரத்தை உணர்த்துகிறது. திருமணமான 6 நாளில் கடற்படை அதிகாரியான வினய் நர்வாலை பறிகொடுத்திருக்கிறார் ஹிமான்ஷி என்ற அந்த இளம் பெண். தேனிலவு கொண்டாட்டத்திற்காக வந்த இடத்தில் கணவனை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்திருக்கின்றனர்.
ஹரியானாவை சேர்ந்த வினய். கொச்சியில் கடற்படை அதிகாரியாக பணிபுரிகிறார். ஏப்ரல் 16 ஆம் தேதி அவரது திருமணம் நடந்துள்ளது. ஏப்ரல் 19ம் தேதி திருமண வரவேற்பு நடந்திருக்கிறது. அதன்பின் தேனிலவுக்காக கணவன் மனைவி இருவரும் காஷ்மீர் வந்திருக்கின்றனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 23, 2025 2:11 PM IST
கல்யாணம் முடிந்து 6 நாட்கள் தான்.. நெஞ்சை உலுக்கும் போட்டோ.. ஹனிமூனுக்கு சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்!


