கல்கிஸை பொலிஸ் பிரிவின் அரலிய வீட்டுத்திட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் லுனாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் லுனாவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகவும், காயமடைந்த மற்றொருவர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அங்குலானை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர்.
தற்போது நடைபெற்று வரும் விசாரணையில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறின் பின்னர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலையைச் செய்த சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் அங்கிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்ய கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.