அருணாசல பிரதேச தலைநகா் இடாநகரில் குவாஹாட்டி உயா்நீதிமன்ற அமா்வுக்கான புதிய கட்டடத்தின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஐந்து நீதிமன்ற அறைகள் மற்றும் நவீன வசதிகளுடன் ரூ.135.35 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய நீதிமன்ற வளாகத்தின் திறப்பு விழாவில் மத்திய அமைச்சா்கள் கிரண் ரிஜிஜு, அா்ஜுன் ராம் மேக்வால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயான், என்.கோட்டீஸ்வா் சிங், சந்தீப் மேத்தா, விஜய் பிஷ்னோய், மாநில முதல்வா் பெமா காண்டு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

