• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கர்நாடக ஜாதிவாரி கணக்கெடுப்பு சமுதாயப் பிளவை ஏற்படுத்தும்! காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
April 23, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
கர்நாடக ஜாதிவாரி கணக்கெடுப்பு சமுதாயப் பிளவை ஏற்படுத்தும்! காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தற்போதைய தரவுகளின்படி ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்துவது சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதுடன், அரசியல் ரீதியாக ஆபத்தானதும்கூட என்று முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்த முதல்வர் சித்தராமையா தீவிரம் காட்டி வருகிறார். இந்த அறிக்கைக்கு பாரதிய ஜனதா கட்சி (பாஜக), மஜத கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஜாதி அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.

இந்த அறிக்கையை அமல்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலரும் ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்தக் கூடாது என்று முதல்வர் சித்தராமையாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் ஒக்கலிகர் சமுதாய எம்எல்ஏக்களும், எம்.பி.பாட்டீல் தலைமையில் லிங்காயத்து சமுதாய எம்எல்ஏக்களும் கூடி விவாதித்துள்ளனர்.

இந்நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதம் நடத்திய சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்காமல், மே 2-ஆம் தேதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி, ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்தினால், சமுதாயங்களுக்கு இடையே பிளவு ஏற்படுவதோடு, அது அரசியல் ரீதியாக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முரண்பட்ட கருத்துகள் இருப்பதால், சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் எவ்வித முடிவையும் எடுக்க முடியவில்லை. பெரும்பான்மையாக கருதப்படும் லிங்காயத்து மற்றும் ஒக்கலிகர் சமுதாயங்களின் மக்கள்தொகை குறைவாக இருப்பதாக அந்த சமுதாயங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 1992-ஆம் ஆண்டில் நான் முதல்வராக இருந்தபோது வெளியிடப்பட்ட சின்னப்ப ரெட்டி ஆணைய அறிக்கையில் இடம்பெற்ற லிங்காயத்துகளின் எண்ணிக்கையைவிட தற்போதைய அறிக்கையில் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள்தொகை எப்படி குறைந்திருக்கும்?; அதிகமாகித்தானே இருந்திருக்கும். எனவே இதை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவியல் ரீதியாக சரியாக இல்லை என்ற பலரது கூற்றில் பகுதியளவை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்த கணக்கெடுப்பு 2015-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டதால், மறு கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம். புதிதாக கணக்கெடுப்பு நடத்தினால்தான் துல்லியமான புள்ளிவிவரங்கள் கிடைக்கும். பல சமுதாயங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளதால், ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்த அரசு அவசரகதியில் முடிவெடுக்காது.

தனது அமைச்சரவை சகாக்களின் நம்பிக்கையையாவது முதல்வர் சித்தராமையா பெற வேண்டும். எதிர்க்கட்சிகள் மற்றும் சமுதாயத் தலைவர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும். ஒருமித்த கருத்தை எட்டியபிறகு ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்தலாம் அல்லது அறிவியல்பூர்வ புள்ளிவிவரங்களை பெற முயற்சிக்கலாம்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பை மறுஆய்வு செய்ய வேண்டும். எனது (வீரப்ப மொய்லி) தலைமையிலான அரசு செயல்படுத்திய சின்னப்பரெட்டி ஆணையமும் இதையே வலியுறுத்தியது. அந்த அறிக்கையை அமல்படுத்தியே 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜாதிவாரி கணக்கெடுப்பால் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறமுடியாது.

இதுபோன்ற அறிக்கைகளை காங்கிரஸ் ஏற்கெனவே அமல்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் கருத்தொற்றுமை அவசியம். அதே சமயம், ஜாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள தரவுகளின் முரண்பாடுகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும். இதை செய்யத் தவறினால், சமுதாயங்களுக்கு இடையே பிளவு ஏற்படுவதுடன், அரசியல் ரீதியாகவும் அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

மிகவும் பின்தங்கிய சமுதாயங்களின் எண்ணிக்கையைவிட, முஸ்லிம்களின் மக்கள்தொகை 4 சதவீம் அல்லது 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இதனால்தான் இது அறிவியல் ரீதியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அல்ல என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

Read More

Previous Post

யாழில் காவல்துறையினரின் அடாவடி : துப்பாக்கி முனையில் இழுத்து செல்லப்பட்ட இளைஞன்

Next Post

சிஎஸ்கே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா? – என்ன சொல்கிறார் தோனி | can csk qualify for playoffs of ipl 2025 what dhoni said explained

Next Post
சிஎஸ்கே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா? – என்ன சொல்கிறார் தோனி | can csk qualify for playoffs of ipl 2025 what dhoni said explained

சிஎஸ்கே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா? - என்ன சொல்கிறார் தோனி | can csk qualify for playoffs of ipl 2025 what dhoni said explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin