Last Updated:
மகனின் இறுதி சடங்கிற்கு கூட வராத தனது கணவர், சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடுத்திருப்பதாக சிறுவனின் தாயார் ஷர்மிளா குற்றஞ்சாட்டியிருந்தார். இதேபோன்று, தன்னை ஏமாற்றி கையொப்பம் பெறப்பட்டதாக செல்வராஜும் குற்றம் சாட்டியிருந்தார்.
கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தங்களுக்காக வாதாட சட்ட உதவி மையத்தின் மூலம் வழக்கறிஞரை ஏற்படுத்தி தருமாறு, நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தாய், மனைவியை இழந்த நபர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூரில் தவெக தலைவர் விஜயின் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 வயது சிறுவன் ப்ரித்திக், சந்திரா உள்ளிட்ட 41 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம், சந்திராவின் கணவர் செல்வராஜ் பெயரில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், மகனின் இறுதி சடங்கிற்கு கூட வராத தனது கணவர், சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடுத்திருப்பதாக சிறுவனின் தாயார் ஷர்மிளா குற்றஞ்சாட்டியிருந்தார். இதேபோன்று, தன்னை ஏமாற்றி கையொப்பம் பெறப்பட்டதாக செல்வராஜும் குற்றம் சாட்டினார்.
Delhi,Delhi,Delhi
October 13, 2025 2:43 PM IST
கரூர் விவகாரத்தில் தங்கள் பெயரில் மோசடியாக மனுத்தாக்கல்… பாதிக்கப்பட்டோர் உச்சநீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கை


