2016&ஆம் ஆண்டு வரை ஒரு டன் கரும்புக்கு ரூ.750 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. 2017&ஆம் ஆண்டில் அது நிறுத்தப்பட்டு விட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஊக்கத்தொகையை மீண்டும் வழங்குவோம் என்று அறிவித்தது. அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் அது இப்போது டன்னுக்கு ரூ.1100 ஆக அதிகரித்திருக்கும். அத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ. 4,390 ஆக உயரக்கூடும். அது ஓரளவு கட்டுபடியாகக் கூடிய விலையாக இருந்திருக்கும். ஆனால், திமுக, சட்டப் பேரவைத் தேர்தலில் அளித்த அதன் வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பதால் உழவர்களின் துயரம் தீரவில்லை.

