தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்ட தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 19 காலை 7 மணிமுதல் ஜூன் 1 மாலை 6.30 வரை தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், தடையை மீறி ஒடிஸாவை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒன்று தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஒடிஸா மாநில தேர்தல் ஆணையருக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

