• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கருத்துக் கணிப்பு எதிரொலி; பங்குச் சந்தை இன்று உச்சம் தொடும்: நிபுணர்கள் எதிர்பார்ப்பு | Sensex may hit high levels post exit poll data

GenevaTimes by GenevaTimes
June 3, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
கருத்துக் கணிப்பு எதிரொலி; பங்குச் சந்தை இன்று உச்சம் தொடும்: நிபுணர்கள் எதிர்பார்ப்பு | Sensex may hit high levels post exit poll data
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வந்தது. நேற்றுமுன்தினம் இறுதி கட்ட வாக்குப் பதிவு முடிந்த நிலையில், ஊடகங்கள் கருத்துக் கணிப்பு வெளியிட்டன.

பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று பெரும்பாலான ஊடகங்கள் கணிப்பு தெரிவித்தன. இதனால், இன்றைய பங்கு வர்த்தகம் ஏற்றத்தில் காணப்படும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அதேபோல், ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இதனால், அன்றைய தினம் பங்குச் சந்தை புதிய உச்சம் தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பங்குச் சந்தை நிபுணர்கள் கூறுகையில், “இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும் வலுவான போட்டி இருந்தது. காங்கிரஸ் முந்தைய தேர்தலைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கை பரவலாக உருவானது. பாஜக 2019 மக்களவைத் தேர்தலில் 300-க்கு மேற்பட்ட இடங்களில் வென்றது.

ஆனால், இந்தத் தேர்தலில் காங்கிரஸின் வலுவான போட்டியால், பாஜக அதிக இடங்களில் வெல்வது சவாலாக இருக்கும் என்ற சூழல் உருவானது. இதனால் தேர்தல் முடிவு குறித்து குழப்பம் இருந்தது. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அந்தக் குழப்பத்தை நீக்கியுள்ளன. பெரும்பாலான கணிப்புகள் பாஜக 300-க்கு மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளன. இதனால், திங்கள் கிழமை நிஃப்டி 23,000-க்கு மேல் உயரும்.

செவ்வாய்க் கிழமை தேர்தல் முடிவுகளின்போது பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றினால் நிஃப்டி 23,500 புள்ளிகளைத் தாண்டும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பால், பொதுத் துறை நிறுவனங்கள், அதானி, முகேஷ் அம்பானி நிறுவனங்களின் பங்குகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன” என்று தெரிவித்துள்ளனர்.



Read More

Previous Post

‘பிரக்ஞானந்தாவை செஸ் உலகமே வியந்து பார்க்கிறது’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

Next Post

மலாக்காவில் ஏற்பட்ட விபத்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் மரணம் | Makkal Osai

Next Post
மலாக்காவில் ஏற்பட்ட விபத்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் மரணம் | Makkal Osai

மலாக்காவில் ஏற்பட்ட விபத்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் மரணம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin