இந்திய அணியை பொறுத்தவரை அவர்கள் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.குறிப்பாக மிடில் ஓவர்களில் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படுகிறார். அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா போன்ற சுழற்பந்து வீச்சாளர்களும் நிதானமாக செயல்பட்டு வருகின்றனர். எந்த நேரத்திலும் துல்லியமாக பந்து வீசக்கூடிய பும்ரா அணிக்கு மேலும் வலுவை சேர்க்கிறார். அதனால் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை விட இந்தியாவுக்கு இது மற்றொரு முக்கிய அம்சமாக இருக்கும்.
மேலும் போட்டியில் வெற்றி பெறுவதற்கு அனைவரும் ஒன்றாக சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்தத் தொடரில் பும்ரா ஏற்கனவே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இங்குள்ள நிலைமைகள் 2022 போட்டியிலிருந்து வேறுபட்டவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மொத்தத்தில், இங்கிலாந்தை விட இங்குள்ள சூழல் இந்திய அணிக்கே பொருத்தமாக இருக்கிறது,” என்றார். இன்று நடைபெற உள்ள போட்டியில் இந்தியா வெற்றி பெற்று செமி பைனலுக்கு நுழைய வேண்டும் என்பதே பல்வேறு ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.

