Last Updated:
அனிதா ஆனந்த் கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக பகவத் கீதையை சாட்சியாக வைத்து பதவியேற்றார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் இந்து பெண்.
கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான அனிதா ஆனந்த் பகவத் கீதையை சாட்சியாக வைத்து பதவியேற்றுக்கொண்டார்.
அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த மெலனீ ஜோலி, தொழிற்துறை அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டார். இதனைத்தொடர்ந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த்துக்கு வெளியுறவுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல்முறையாக இந்து பெண் ஒருவர் கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராகி உள்ளார். அவர் பகவத் கீதையை சாட்சியாக வைத்து பதவியேற்றுக்கொண்டார்.
I am honoured to be named Canada’s Minister of Foreign Affairs. I look forward to working with Prime Minister Mark Carney and our team to build a safer, fairer world and deliver for Canadians. pic.twitter.com/NpPqyah9k3
— Anita Anand (@AnitaAnandMP) May 13, 2025
கனடா பிரதமர் மார்க் கார்னேவுடன் சேர்ந்து, வளமான, பாதுகாப்பான நாட்டை கட்டமைக்க காத்திருப்பதாக அனிதா தெரிவித்தார். இவர் முன்னதாக அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அரசியலில் இருந்து விலக உள்ளதாக அவர் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்த நிலையில், மார்க் கார்னேயின் அறிவுறுத்தலால் அவர் மீண்டும் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1960களில் அனிதாவின் குடும்பத்தினர் கனடாவுக்கு குடிபெயர்ந்தனர். இவரது தந்தை தமிழ்நாட்டையும், தாய் பஞ்சாபையும் சேர்ந்தவர்களாவர்.
May 14, 2025 10:40 AM IST
கனடா வெளியுறவு அமைச்சரானர் தமிழக வம்சாவளி அனிதா ஆனந்த்; பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார்!


