கனடாவின் மேனிடோபா மாகாண அரசு, சர்வதேச மாணவர்களுக்கான நிரந்தர குடியுரிமை பெறும் திட்டத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளது.
கனடாவில் படிப்பை முடித்த உடனே ஏதேனும் ஒரு துறையில் ஓராண்டு வேலைக்கான ஒப்பந்த கடிதம் பெற்றால், உடனடியாக பி.ஆர்., எனப்படும் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த குடியுரிமை பெறுவதற்கான சி.இ.பி., எனும் ‘கேரியர் எம்ப்ளாயிமென்ட் பாத்வே’ திட்டம் கனடாவில் உள்ள மாகாண அரசுகள் செயல்படுத்தி வந்தன.
புதிய விதிகள் அறிமுகம்
இந்நிலையில், இத்திட்டத்தை மேனிடோபா மாகாண அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.புதிய விதிகளின்படி இனி பட்டப்படிப்பு முடித்ததும், நேரடியாக நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாது.

ஒரு நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் முழு நேரப் பணியாளராக பணியாற்றி இருக்க வேண்டும். தற்காலிக ஒப்பந்தங்கள் ஏற்கப்படாது. நீண்ட கால அடிப்படையில் முழு நேர பணிக்கான ஒப்பந்த கடிதம் பெற்றிருக்க வேண்டும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

