இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஜோகன்னஸ்பெர்க் வான்டர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் இந்தியா களமிறங்கியது. தொடரில் முன்னிலை பெற்றிருந்தாலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டும் கோப்பையை வெல்ல முடியும் என்ற நிலையில் இந்தியாவும், தோல்வியை தவிர்த்து தொடரை சமன் செய்யும் முனைப்பில் தென் ஆப்பரிக்காவும் களமிறங்கின.

