இது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூரியிருப்பதாவது: “மாணவர்களின் நலன் குறித்தும் தேர்வு குறித்த அழுத்தத்திலிருந்து விடுவித்தல் குறித்தும் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
தேர்வுக்கான பயிற்சி மையங்கள் இதற்கான காரணியாக உள்ளது. இத்தகைய நிலையில், அவை வணிகமயமாக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்யும்.
பல்கலைக்கழக மானியக் குழு – சியூஇடி(க்யூட்) தேர்வுகளை எளிமையாக்குவது குறித்து அரசு செயலாற்றி வருகிறது.
நுழைவுத் தேர்வுகளைப் பொருத்தவரையில், தொழில்நுட்பம் சார்ந்து தேர்வுகளை நடத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கணினி வழியில் நுழைவுத் தேர்வுகள் நடத்தவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பள்ளியிலேயே மாணவர்களை நுழைவுத் தேர்வுகளுக்கு ஏற்றவாறு தயார் செய்ய வேண்டும். உளவியல் நீதியான தேர்வு முறைகள் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு அவை மேம்படுத்தப்பட வேண்டும்.
சர்வதேச பங்களிப்புடன் ஒத்துழைப்புடனும் இந்திய கல்வி முறையை சர்வதேச தரத்துக்கு எடுத்துச் செல்வது குறித்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக 3 பேர் கொண்ட உயரதிகார செயல் குழு ஒன்று பேராசிரியர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

