• Login
Friday, October 24, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கணவருக்குத் தெரியாமல் நடிகை ஸ்ரீதேவி செய்த அந்த விஷயம்.. இதெல்லாம் நடந்திருக்கா?

GenevaTimes by GenevaTimes
October 23, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கணவருக்குத் தெரியாமல் நடிகை ஸ்ரீதேவி செய்த அந்த விஷயம்.. இதெல்லாம் நடந்திருக்கா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இந்திய சினிமாவில் மறக்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்தவர் நடிகை ஸ்ரீதேவியை நன்கு அறிந்த நடிகை குட்டி பத்மினி, தற்போது ஸ்ரீதேவியின் வாழ்க்கை குறித்த சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். 

அவரது பேட்டிகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. அவரது பேட்டியில், ” ஸ்ரீதேவி புகழ் பெற்ற சமயத்தில், பல படங்களில் நடித்து லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார். அப்போது, மகள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிடுவாரோ என்று அஞ்சிய ஸ்ரீதேவியின் தாய், மாலை நேரங்களில் அவர் வெளியே செல்வதைத் தடுக்க ஒயின் கொடுத்தார். 

“கொஞ்சம் ஒயின் குடித்துவிட்டு, உடல் ஆரோக்கியத்திற்காக எட்டு மணிக்கே தூங்கிவிடு” என்று கூறியுள்ளார். இது ஸ்ரீதேவியின் அம்மாதான் செய்தார் என்றாலும், அது தவறான வழிமுறை என்று குட்டி பத்மினி சுட்டிக்காட்டினார்.

காலப்போக்கில், ஒயின் இல்லாமல் ஸ்ரீதேவியால் இருக்க முடியவில்லை. ஒயின் அவரது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டதாக குட்டி பத்மினி தெரிவித்தார். ஸ்ரீதேவியைப் பார்த்தால், அவருடைய மகள்களின் சகோதரி போலவே தோன்றுவார். எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்பதில் ஸ்ரீதேவி உறுதியாக இருந்தார். 

அவருக்கு பாதுகாப்பு உணர்வு அதிகம். அழகு குறைந்துவிட்டால், மார்க்கெட் இருக்காது என்றும், தன்னை பற்றி எல்லோரும் எப்போதும் பாராட்டிப் பேச வேண்டும் என்றும் ஸ்ரீதேவி விரும்பினார். இதனாலேயே, அவர் ஏராளமான பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைகளை செய்துகொண்டார்.

லண்டனில் இருந்த ஒரு பிரபலமான பிளாஸ்டிக் சர்ஜன் மூலம் ஸ்ரீதேவி இந்த அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதாக, அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாக குட்டி பத்மினி கூறினார். 

ஸ்ரீதேவி தன் மூக்கை மட்டும் நான்கு முறை அறுவை சிகிச்சை செய்துள்ளார். கன்னங்கள் உள்ளிட்ட பல பகுதிகளிலும் அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார். இவற்றை தனது கணவருக்குத் தெரியாமல், லண்டனில் ஷாப்பிங் செல்வதாக கூறிவிட்டு சென்று செய்துள்ளார். கடுமையான உணவுக்கட்டுப்பாட்டையும் ஸ்ரீதேவி பின்பற்றியுள்ளார். 

ஸ்ரீதேவியும் அவரது இரண்டு மகள்களும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தனர். அவர்கள் இருவரும் அதிக செலவு செய்ததாக தான் கேள்விப்பட்டதாக குட்டி பத்மினி தெரிவித்தார். பல சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது செலவுகளுக்காகவும், போனி கபூர் படங்களை தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஸ்ரீதேவிக்கு நிறைய இழப்புகள் ஏற்பட்டன. இதற்கிடையில், ஸ்ரீதேவிக்கும் அவரது சகோதரி லதாவுக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. ஒரு வகையில், லதா செய்தது தவறல்ல. ஒருமுறை மருத்துவமனையில் லதாவை சந்தித்தபோது, “நீ செய்வது தவறு இல்லையா, இவை அனைத்தும் அவளால் சம்பாதிக்கப்பட்டவை அல்லவா?” என்று நான் கேட்டேன். 

அதற்கு லதா, “ஸ்ரீதேவி போனி கபூரை முழுமையாக நம்பி, அவர் சொல்லும் இடங்களில் எல்லாம் கையெழுத்திட்டார். அப்புறம் நான் என்ன செய்வது?” என்று பதிலளித்தார். ஒரு வகையில் இது உண்மைதான். ஸ்ரீதேவி சம்பாதித்த சொத்துக்கள் அவை. ஆனால் ஒரு சகோதரி அதை பாதுகாக்க நினைத்தது தவறில்லை.

சென்னையில் ஸ்ரீதேவிக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தன. அனைத்தும் இழக்கப்பட்டு, இறுதியில் CAT நகரில் உள்ள வீடு மட்டுமே எஞ்சியிருந்தது. பலமுறை ஸ்ரீதேவி காசோலை வழக்குகளில் சிக்கினார். இவை அனைத்தையும் செய்தித்தாள்களில் படிக்கும்போது நான் பயந்தேன்.

ஸ்ரீதேவி இதை எப்படி சமாளிக்கப் போகிறார் என்று யோசித்தேன். ஆனால் அவரது கணவர் அனைத்தையும் தீர்த்து வைத்தார். ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், அந்த பிரச்சனைகள் ஸ்ரீதேவியை பாதிக்காமல் அவரது கணவர் பார்த்துக்கொண்டார் என்று குட்டி பத்மினி மேலும் கூறினார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

விடுமுறைக்காக குடும்பத்தாருடன் லங்காவி சென்றவர்களில் இருவர் கடலில் மூழ்கி மரணம் | Makkal Osai

Next Post

தீவிரவாதத்துக்கு ‘ஹலால்’ நிதி: உ.பி. முதல்வர் குற்றச்சாட்டு | Halal funding for terrorism UP cm yogi adityanath allegation

Next Post
தீவிரவாதத்துக்கு ‘ஹலால்’ நிதி: உ.பி. முதல்வர் குற்றச்சாட்டு | Halal funding for terrorism UP cm yogi adityanath allegation

தீவிரவாதத்துக்கு ‘ஹலால்’ நிதி: உ.பி. முதல்வர் குற்றச்சாட்டு | Halal funding for terrorism UP cm yogi adityanath allegation

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin