திருமணமான அந்த மகள் ஏற்கனவே பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருப்பதோடு, தனக்கென ஒரு பங்களாவையும் சொந்தமாக வைத்துள்ளார். இப்போது அவர், தந்தையின் சொத்தில் தனக்குரிய நான்கில் ஒரு பங்கு (1/4) போக, தாய்க்குச் சேர வேண்டிய நான்கில் ஒரு பங்கில் மூன்றில் ஒரு பகுதியையும் (1/3) கேட்கிறார். ஆனால், தாயோ தனது பங்கை இரண்டு மகன்களுக்கு மட்டுமே சமமாகப் பிரித்துத் தர விரும்புகிறார். அந்தச் சொத்து இன்னும் மறைந்த தந்தையின் பெயரிலேயே உள்ளது. இந்த நிலையில், இது சாத்தியமா?, தாய் எழுதும் உயில், அவரது மறைவுக்குப் பிறகு செல்லுபடியாகுமா? என்பது குறித்து நிபுணர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

