• Login
Monday, October 20, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கணவன் இறந்த இரண்டாம் நாளே ஆணுறையுடன் சிக்கிய மனைவி

GenevaTimes by GenevaTimes
October 19, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கணவன் இறந்த இரண்டாம் நாளே ஆணுறையுடன் சிக்கிய மனைவி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



 


சப்தகிரி காலனி பகுதியில், மது போதைக்கு அடிமையான ஓட்டுனர் சுரேஷை அவரது மனைவி மௌனிகா, காதலன் அஜய் மற்றும் நண்பர் சிவகிருஷ்ணாவுடன் சேர்ந்து திட்டமிட்டு கொன்ற சம்பவம், பொலிஸ் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கணவன் நெஞ்சு வலியால் இறந்ததாக நாடகம் அடித்து விளையாடிய மௌனிகா, உண்மையில் அவரை தூக்க மருந்து கலந்த மதுவால் மயக்கி, சேலையால் கழுத்தை நெரித்து கொன்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.


சம்பவம் நிகழ்ந்த கடந்த வாரம், சப்தகிரி காலனியில் உள்ள சுரேஷ்-மௌனிகா தம்பதியின் வீட்டில் நடந்தது. இரவு நேரத்தில், இளம்பெண் மௌனிகா திடீரென உரத்த கதறல் சத்தம் எழுப்பினார்.


அக்கம்-பக்கம் வசிப்பவர்கள் அந்த சத்தத்தை கேட்டு பதற்றத்தில் ஓடி வந்து பார்த்தனர். “என் கணவர் சுரேஷுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கு!” என்று அழுதுகொண்டே சொன்ன மௌனிகா, அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அண்டைவீட்டுக்காரர்கள்.அங்கு சிகிச்சை பெற்ற சுரேஷ் உயிரிழந்ததாக டாக்டர் அறிவித்தார். இந்த செய்தியை கேட்டு பதறிய சுரேஷின் பெற்றோர், மகன் சடலத்தை பார்த்து கதறி அழுதனர்.


அடுத்தடுத்த நாட்களில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. சுரேஷின் பெற்றோர், மகன் இறந்த சோகத்தில் மௌனிகாவின் வீட்டிலேயே தங்கியிருந்தனர். ஆனால், அந்த சோகத்தில் மௌனிகா மட்டும் மூழ்கவில்லை என்பது தான் அதிர்ச்சி!


சுரேஷ் இறந்த அடுத்த நாள் முதல், மௌனிகா எந்த சோகமும் இல்லாமல் தனது ஆண் நண்பர்களுடன் ஊர் சுத்திட்டு மகிழ்ச்சியுடன் இருந்தார். அவருடைய ஹேன்ட் பேக்கில் ஆணுறை பாக்கெட்டுகள் இருந்ததையும் கண்ட சுரேஷின் பெற்றோருக்கு அவரது மனைவி மீது சந்தேகம் எழுந்தது.


“மௌனிகாதான் நம் மகனுக்கு ஏதோ செய்திருக்கிறாள்” என்று நினைத்து, அவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.பொலிஸார் அதிகாரிகள் மௌனிகாவை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் முன்னும் பின்னும் முரண்படும் பதில்களை அளித்த மௌனிகா, கடும் விசாரணையில் உண்மைகளை ஒப்புக்கொள்ள வேண்டியதாகியது.


விசாரணையின்படி, சுரேஷ்-மௌனிகா தம்பதி 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டது. இருவருக்கும் இரு குழந்தைகள் உள்ளனர். ஓட்டுனர் பணியில் ஈடுபட்ட சுரேஷ், ஆரம்பத்தில் குடும்பத்தோடு மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்.


ஆனால், நாட்கள் போக போக மது போதைக்கு அடிமையானார். வீட்டுக்கு எப்போதும் முழு போதையில் திரும்பி, சம்பாதித்த பணத்தை மனைவிக்கு கொடுக்காமல், அவர்களை தாக்கி சித்திரவதை செய்தார்.இந்த வன்முறையால் மன உளைச்சலுக்கு ஆளான மௌனிகா, குழந்தைகளின் படிப்பு செலவுக்காகவும், பணத்துக்காகவும் பாலியல் தொழிலில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் இளைஞர் அஜயுடன் அவருக்கு தகாத உறவு உருவானது.


சுரேஷ் வேலைக்கு சென்ற பிறகு, அஜயை தினசரி வீட்டுக்கு அழைத்து தனிமையில் இருந்தார் மௌனிகா. மது போதையில் ஊதாரியாக இருந்த சுரேஷ், மனைவியிடம் பணம் கேட்டு அடிக்கடி சண்டை போட்டார்.


கணவன் மீது கடும் கோபத்தில் இருந்த மௌனிகா, தனது காதலன் அஜய் மற்றும் நண்பர்கள் சிவகிருஷ்ணா, சந்தியாவிடம் தனது துன்பங்களை பகிர்ந்தார். “உன் கணவன் தினசரி உன்னை துன்புறுத்துகிறான் என்றால், அவனது கதையை முடித்துவிடு” என்று அவர்கள் ஐடியா கொடுத்தனர்.


சமைக்கப்பட்ட உணவில் அதிக அளவு வயக்ரா (15 மாத்திரைகள்) மற்றும் இரத்த அழுத்த மாத்திரைகள் (15) கலந்து கொடுத்து, “ஹார்ட் அட்டாக் வந்து இறந்தார்” என்று சொந்தக் குடும்பத்தாரிடம் பொய் சொல்லலாம் எனத் திட்டமிட்டனர்.ஆனால், சமைக்கப்பட்ட உணவில் ஒரு விசித்திர வாசனை வந்ததால், சுரேஷ் அதை சாப்பிட மறுத்தார்.


தோல்வியடைந்த முதல் திட்டத்திற்கு மாற்றாக, அடுத்த நாள் சுரேஷ் வீட்டில் உட்கார்ந்து மது அருந்தியபோது, அவருக்கே தெரியாமல் அதில் அதிக அளவு தூக்க மருந்து கலந்தார் மௌனிகா. முழுமையாக மது அருந்திய சுரேஷ், தனது அறைக்கு தூங்கச் சென்றார்.அப்போது, அறைக்குள் நுழைந்த மௌனிகா, சேலையால் சுரேஷின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்றார். பின்னர், “ஹார்ட் அட்டாக் வந்து உயிரிழந்தார்” என்று அலறி அழுது நாடகம் அரங்கேற்படுத்தினார்.


விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளியானதைத் தொடர்ந்து, மௌனிகா, அஜய், சிவகிருஷ்ணாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தியாவின் பங்கு குறித்தும் விசாரணை நடக்கிறது.


“இது ஒரு திட்டமிட்ட கொலை. குடும்ப வன்முறை, போதை, தகாத உறவுகள் போன்ற சமூக பிரச்சினைகள் இதன் பின்னணியில் உள்ளன” என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சுரேஷின் பெற்றோர், “நம் மகன் போதைக்கு அடிமையானதால் இப்படி நடந்தது.


ஆனால், மௌனிகாவின் செயல் மன்னிக்க முடியாதது” என்று கூறினர். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பொலிஸ் ஏற்பாடு செய்ய உள்ளதாகத் தெரிகிறது.இந்தச் சம்பவம், குடும்ப வன்முறை மற்றும் போதை பிரச்சினைகளுக்கு எச்சரிக்கை அளிக்கிறது. பொலிஸார் மேலும் விவரங்களை வெளியிட உள்ளனர்.


 



Read More

Previous Post

மலையேற்ற வீரர் முஸ்தக்கீமின் மரணம் குறித்து விசாரிக்க எண்மருக்கு அழைப்பாணை -போலீஸ் | Makkal Osai

Next Post

வொர்க் ஆகாத GPAY.. ரூ.20 சமோசாவுக்காக ஸ்மார்ட் வாட்சை பறிகொடுத்த ரயில் பயணி! | இந்தியா

Next Post
வொர்க் ஆகாத GPAY.. ரூ.20 சமோசாவுக்காக ஸ்மார்ட் வாட்சை பறிகொடுத்த ரயில் பயணி! | இந்தியா

வொர்க் ஆகாத GPAY.. ரூ.20 சமோசாவுக்காக ஸ்மார்ட் வாட்சை பறிகொடுத்த ரயில் பயணி! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin