மூவார் ஜாலான் பாரிட் உனாஸ் சாலையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) நடந்த சாலை விபத்தில் 22 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில், உள்ளூர்வாசி ஒருவர் ஓட்டிச் சென்ற அவேட்டா V13R மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்டுள்ளதாக முவார் காவல் துறை உதவி ஆணையர் ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜீஸ் தெரிவித்தார்.
மூவாரிலிருந்து பத்து பஹாட் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, பாதிக்கப்பட்டவர் மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஓட்டுநர் சாலையின் இடதுபுற ஓரமாக விலகிச் சென்று ஒரு மரத்தில் மோதினார் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
பாதிக்கப்பட்டவருக்கு கடுமையான உள் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார். சரியான மரணக் காரணத்தைக் கண்டறிய, பிரேதப் பரிசோதனைக்காக உடல் சுல்தானா பாத்திமா மூவார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



