Last Updated:
தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்ட போது ஒரு அறையில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் பதவி நீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளதால், உச்ச நிதிமன்றத்தை நாடி உள்ளார் நீதிபதி யஷ்வந்த் வர்மா.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா இருந்தபோது அவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டது. தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்ட போது ஒரு அறையில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டார்.
அதன்படி நடந்த விசாரணையில், யஷ்வந்த் வர்மா வீட்டு ஊழியர்கள் மற்றும் சாட்சியங்களின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிகிறது. விசாரணையில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கணக்கில் வராத ரூபாய் நோட்டுகள் இருந்தது உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் பணி நீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இதற்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்த நிலையில், வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில், தன்மீதான விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தனது தரப்பு வாதத்தை கூற அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் எந்த உறுதியான ஆதாரங்களும் இன்றி வெறும் அனுமானங்களின் அடிப்படையில் தன் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
Delhi,Delhi,Delhi
July 18, 2025 1:03 PM IST


