• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கட்டுக்கடங்காத கூட்டத்தால் சபரிமலையில் குழந்தைகள், முதியோர் பரிதவிப்பு: மூதாட்டி மாரடைப்பால் உயிரிழப்பு | Lakhs queue up for Sabarimala pilgrimage

GenevaTimes by GenevaTimes
November 18, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
கட்டுக்கடங்காத கூட்டத்தால் சபரிமலையில் குழந்தைகள், முதியோர் பரிதவிப்பு: மூதாட்டி மாரடைப்பால் உயிரிழப்பு | Lakhs queue up for Sabarimala pilgrimage
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சபரிமலை: சபரிமலை​யில் ஏற்​பட்​டுள்ள கடும் நெரிசலில் சிக்கி குழந்​தைகள், முதி​யோர் பெரும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். வரிசை​யில் நீண்ட நேரம் காத்​திருந்த மூதாட்டி ஒரு​வர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தார்.

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் ஆன்​லைன் மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்​கிங் மூலம் 20 ஆயிரம் பேரும் என மொத்​தம் 90 ஆயிரம் பக்​தர்​கள் தின​மும் அனு​ம​திக்​கப்​படு​வர் என்று தேவசம் போர்டு தெரி​வித்​துள்​ளது. ஆனால் ஸ்பாட் புக்​கிங்​கில் கட்​டுப்​பாடின்றி பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர். இதனால் நெரிசல் ஏற்​பட்டு பம்​பை, மரக்​கூடம் உள்​ளிட்ட பல பகு​தி​களி​லும் பக்​தர்​கள் வெகுநேரம் நிறுத்தி வைக்​கப்​பட்டு பின்பு அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர். 6 மணி நேரத்​துக்​கும் மேல் காத்​திருக்​கும் நிலை ஏற்​படு​கிறது. அது​வரை குடிநீர், கழிப்​பிட வசதி இல்​லாத​தால் பக்​தர்​கள் பெரும் பரித​விப்​புக்கு உள்​ளாகி வரு​கின்​றனர். இத்​துடன் கடும் நெரிசலும் ஏற்​படு​வ​தால் பலருக்​கும் மூச்​சுத்​திணறல் ஏற்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில் கட்​டுங்​கடங்​காத கூட்​டத்​தால் அப்​பாச்​சிமேடு பகு​தி​யில் மூதாட்டி ஒரு​வர் உயி​ரிழந்​தார். போலீ​ஸார் உடலை மீட்டு விசா​ரணை நடத்​தினர். இதில் இறந்​தவர் கேரள மாநிலம் கோழிக்​கோடு அருகே கோகிலாண்டி பகு​தி​யைச் சேர்ந்த சதி (58) என்​பது தெரிய​வந்​தது. அவர் மாரடைப்​பி​னால் இறந்​த​தாக மருத்​து​வத் துறை​யினர் தெரி​வித்​தனர். கடும் நெரிசலால் குழந்​தைகளும், முதி​யோர்​களும் அதிக சிரமங்​களை சந்​தித்து வரு​கின்​றனர். இதனால் பக்​தர்​கள் பலரும் சபரிமலை செல்​லாமல் பம்பா கணபதி கோயிலுடன் திரும்​பிச் செல்​லும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து உப்​பார்​பட்​டியைச் சேர்ந்த பக்​தர் மணி​கண்​டன் கூறும்​போது, ‘‘ஸ்​பாட் புக்​கிங்கை உடனடி​யாக குறைக்க வேண்​டும் அல்​லது நிறுத்த வேண்​டும். அது​தான் இவ்​வளவு பிரச்​சினைக்​கும் காரணம். லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பக்​தர்​கள் வந்து செல்​லக்​கூடிய அளவில் இங்கு எந்த வசதி​யும் ஏற்​படுத்​தப்​பட​வில்​லை. பெரியள​வில் அசம்​பா​விதம் ஏற்​படு​வதற்கு முன்பு கூட்​டத்தை கட்​டுப்​படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என்​றார்.

தேவசம் போர்டு தலை​வர் ஜெயகு​மார் கூறிய​தாவது: சபரிமலை​யில் பக்​தர்​கள் கூட்​டம் அதி​கரித்து வரு​கிறது. கூட்​டத்தை கட்​டுப்​படுத்த போதிய நடவடிக்கை எடுக்​கப்​பட​வில்​லை. ஒரு நிமிடத்​துக்கு 90 பேர் பதினெட்​டாம் படி​யில் ஏறுகின்​றனர். தின​மும் 90,000 பக்​தர்​களை மட்​டுமே அனு​ம​திக்க வேண்​டும். ஆனால் லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் குவிந்​துள்​ளனர். இதுதொடர்​பாக மாநில காவல் துறைக்கு கடிதம் எழுதி உள்​ளேன். மத்​திய பாது​காப்​புப் படை வீரர்​கள் விரை​வில் சபரிமலை வந்து சேரு​வார்​கள் என்று எதிர்​பார்க்​கிறோம். கூட்ட நெரிசலை சமாளிக்க சுவாமியை தரிசிக்​கும் நேரம் அதி​கரிக்​கப்​பட்டு இருக்​கிறது. இவ்​வாறு ஜெயகு​மார் தெரி​வித்​தார்.

கேரள காவல் துறை ஏடிஜிபி ஸ்ரீஜித் கூறிய​தாவது: செவ்​வாய்க்​கிழமை மதி​யம் 12 மணி நில​வரப்​படி 1.96 லட்​சம் பேர் சுவாமியை தரிசனம் செய்​துள்​ளனர். கடந்த சீசனை​விட தற்​போது சபரிமலை​யில் மக்​கள் கூட்​டம் அலைமோதுகிறது. பக்​தர்​கள் கூட்​டத்தை கட்​டுப்​படுத்த உடனடி தினசரி தரிசன பதிவு 20,000 ஆக குறைக்​கப்​பட்டு உள்​ளது. கூடு​தல் போலீ​ஸார் குவிக்​கப்​பட்டு உள்​ளனர். மத்​திய பாது​காப்​புப் படை வீரர்​கள் செவ்​வாய்க்​கிழமை இரவு வந்து சேரு​வார்​கள் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அவர்​களும் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​படு​வார்​கள். பக்​தர்​கள் வி​தி​முறை​களை கடைப்​பிடித்​தால் நெரிசலை கட்​டுப்​படுத்த முடி​யும். இவ்​வாறு ஏடிஜிபி தெரி​வித்தார்​.



Read More

Previous Post

’தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை ஒருபோதும் விடுவிக்காதீர்’

Next Post

iPhone பிரியர்களுக்கு குட் நியூஸ்.. ஆப்பிள் நிறுவனம் முக்கிய அப்டேட்!

Next Post
iPhone பிரியர்களுக்கு குட் நியூஸ்.. ஆப்பிள் நிறுவனம் முக்கிய அப்டேட்!

iPhone பிரியர்களுக்கு குட் நியூஸ்.. ஆப்பிள் நிறுவனம் முக்கிய அப்டேட்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin