Last Updated:
மறக்க முடியாத அனுபவம் அளிக்கும் இடமாக இந்த கடலுக்கு அடியிலான அருங்காட்சியகம் இருப்பதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.
ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை நிலவி வரும் நிலையில், குரோஷியா நாட்டில் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளது.
அந்நாட்டின் ட்ரோகிர் அருகே கடலுக்குள் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இயேசுவின் சிலுவைப் பாதையை சித்தரிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 4 மீட்டர் ஆழத்தில் சிற்பங்களையும், 9 மீட்டர் ஆழத்தில் இயேசு கிறிஸ்துவின் பிரம்மாண்ட சிலையையும் காண முடியும்.
இந்த அருங்காட்சியகத்தின் ஆழம் குறைவாக இருப்பதால், நீச்சல் தெரியாதவர்களும் ஸ்னோர்க்லிங் (Snorkelling) உபகரணங்களின் உதவியுடன் பாதுகாப்பாக பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் வெப்பம் தகித்து வரும் நிலையில், அதில் இருந்து தப்பிக்க சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிந்து வருகின்றனர்.
மறக்க முடியாத அனுபவம் அளிக்கும் இடமாக இந்த கடலுக்கு அடியிலான அருங்காட்சியகம் இருப்பதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.
Jul 18, 2026 11:03 AM IST
கடும் வெப்ப அலை.. குரோஷியாவில் கடலுக்கு அடியில் அருங்காட்சியகம்.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!


