Last Updated:
விஸ்டுலா ஆற்றில் நீர் மட்டம் உயரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடுங்குளிரால் போலந்து நாட்டின் விஸ்டுலா ஆறு உறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது வெயிலால் பனி உருகி ஆற்றில் பாய்ந்து செல்லும் காட்சி, சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்து நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் பனிப்பொழிவு வாட்டி வதைத்தது. வரலாறு காணாத பனிப்பொழிவால் ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகள் உறைந்து காணப்பட்டன. இரண்டு மாதங்களுக்கு பிறகு தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ளது. இதனால், உறைந்து காணப்பட்ட நீர்நிலைகளில் பனி உருகத் தொடங்கியுள்ளது.
க்ருட்ஜியாட்ஸ் (GRUDZIADZ) பகுதியில் உள்ள விஸ்டுலா ஆறு முழுவதும் பனிக்கட்டிகள் படலமாக மிதந்து செல்கின்றன. வேகமாக பனி உருகி வருவதால் விஸ்டுலா ஆற்றில் நீர்மட்டம் உயரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Feb 23, 2026 10:16 AM IST


