Last Updated:
கடலூர் ரயில் விபத்துக்குப் பிறகு அனைத்து லெவல் கிராசிங்குகளிலும் ஆட்கள் இல்லாத இன்டர்லாக் கேட் அமைக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
கடலூர் ரயில் விபத்தைத் தொடர்ந்து அனைத்து ரயில்வே லெவல் கிராசிங்கிலும் ஆட்கள் இல்லாத இன்டர்லாக் லெவல் கிராசிங் கேட் அமைக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேள்வி எழுகிறது. 2024ஆம் ஆண்டு தரவுகளின்படி, அகல ரயில் பாதையில் ஆள்கள் கொண்ட லெவல் கிராசிங் எண்ணிக்கை 17 ஆயிரத்து 83ஆக உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 417 ஆட்கள் கொண்ட லெவல் கிராசிங்குகள் இன்னும் மாற்றப்படாமல் இருக்கின்றன.
2014 – 2019 இடைப்பட்ட 5 ஆண்டுகளில் அகலப்பாதையில் உள்ள 8 ஆயிரத்து 948 லெவல் கிராசிங்குகள், ஆளில்லா லெவல் கிராங், மேம்பாலங்கள், சுரங்கப்பாலங்கள் மூலம் அகற்றப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு அனைத்து ஆள் கொண்ட லெவல் கிராசிங்குகளையும் இன்டர்லாக் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியானது.
2020-21ஆம் ஆண்டில் திருச்சி மற்றும் மதுரை கோட்டத்தில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் கடலூர் விபத்து மூலம் 2020-21ஆம் ஆண்டுக்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெளிவாகிறது.
July 10, 2025 6:45 PM IST
கடலூர் ரயில் விபத்து எதிரொலி… லெவல் கிராசிங்குகள் இன்டர்லாக் கேட்… அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவு


