• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கடன் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை அமல்படுத்தும் பொதுத்துறை வங்கிகள்: மத்திய அரசு தகவல்

GenevaTimes by GenevaTimes
November 27, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
கடன் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை அமல்படுத்தும் பொதுத்துறை வங்கிகள்: மத்திய அரசு தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடன் வளர்ச்சியை அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் அடுத்த மூன்று- நான்கு மாதங்களில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் என்று மத்திய நிதிச்சேவை செயலாளர் எம்.நாகராஜு தெரிவித்தார்.

இது தொடர்பாக இந்திய தொழில் கூட்டமைப்பு தில்லியில் செவ்வாய்க்கிழமை நடத்திய உச்சிமாநாட்டில் அவர் பேசியதாவது:

நம் நாட்டில் இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். எனவே கடன் வழங்குவதை அதிகரிப்பதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

அனைத்து துறைகளுக்கும் கடன் வழங்குவதை அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் அடுத்த மூன்று – நான்கு மாதங்களில் புதிய திட்டங்களை அமல்படுத்த உள்ளன.

சிறிய அளவிலான கடன்களை வாங்குபவர்களுக்கு கடன் கிடைப்பதை மேம்படுத்த மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

டிஜிட்டல் மோசடிகள், நிதித்துறை ஸ்திரத்தன்மைக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. இந்த சவாலை சமாளிக்க வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட வங்கித்துறை திருத்த மசோதா, நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற வாய்ப்புள்ளது. வங்கிகளுக்கான ஒழுங்குமுறைகளில் திருத்தங்களைக் கொண்டுவருவதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்குவதில் உலகிலேயே மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. தொழில்-வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. நிதிச்சேவை நிறுவனங்களுக்கு உகந்த சூழலை உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் காப்பீட்டுத் திட்டம், அடல் ஓய்வூதியத் திட்டம் ஆகியவை இத்துறையில் மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.

Read More

Previous Post

நாட்டில் மோசமான வானிலை; அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

Next Post

ஃபீல்டிங்கில் கிங், அசராமல் அதிரடி காட்டிய இடது கை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா பிறந்த நாள் இன்று

Next Post
ஃபீல்டிங்கில் கிங், அசராமல் அதிரடி காட்டிய இடது கை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா பிறந்த நாள் இன்று

ஃபீல்டிங்கில் கிங், அசராமல் அதிரடி காட்டிய இடது கை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா பிறந்த நாள் இன்று

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin