அரசாங்கத்தின் கடன் சுமை 190 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையால் அதிகரித்துள்ளதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாமென அறிவுருத்தப்பட்டுள்ளது.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ (Anil Jayantha Fernando) இதனை முற்றாக நிராகரித்துள்ளார்.
உத்தியோகபூர்வ மற்றும் சரிபார்க்கப்பட்ட தரவுகளைக் குறிப்பிடாமல் நாட்டின் கடன் சுமை குறித்து இத்தகைய தகவல்கள் வெளியிடப்படுவது கவலையளிப்பதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுக் கடன்கள்
மத்திய வங்கியின் தகவல்களை மேற்கோள் காட்டி அரசாங்கக் கடன் 190 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாகச் சமீபத்திய ஊடக அறிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும் இந்த அதிகரிப்பிற்கான அடிப்படையை அந்த அறிக்கைகள் தெளிவாக விளக்கவில்லை என்றும் மற்றும் குறிப்பிடப்பட்ட சில தரவுகள் பிழையானவை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கடன் தரவுகள் காலாண்டுக்கு ஒருமுறை கடன் அறிக்கை (Debt Bulletin) ஊடாக வெளியிடப்படுவதாகவும், அதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பான விரிவான தகவல்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட நாடுகள், பன்முக அமைப்புகள், இருதரப்பு மற்றும் வர்த்தக ஆதாரங்களில் பெறப்பட்ட கடன் விவரங்கள் உத்தியோகபூர்வ அறிக்கைகளில் துல்லியமாக உள்ளடக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் கடன் நிலைமை குறித்துக் கருத்துக்கள் வெளியிடுவதற்கு முன்னர் உத்தியோகபூர்வ ஆவணங்களைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் மற்றும் ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரசாங்கக் கடன் அதிகரிக்கவில்லை என்றும் பிரதி அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17

