கடனட்டை (Credit Card) வட்டி வீதங்களை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பணவீக்கம் 0.9 வீதமாக காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளதாக ஆசு மாரசிங்க எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணையாக 336 மில்லியன் அமெரிக்க டொலர்
கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாடு தற்பொழுது செல்லும் பாதையை மாற்றினால் பாரதூரமான பொருளாதார பாதிப்புகள் ஏற்படக்கூடுமெனவும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளதாக ஆசு மாரசிங்க எம்.பி. தெரிவித்துள்ளார்.
The post கடனட்டை வட்டி வீதத்தை குறைப்பதற்கு ஆலோசனை appeared first on Thinakaran.

