இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், ‘இந்திய நிலப்பரப்பை சீனா சொந்தம் கொண்டாடும் நேரத்தில், கச்சத்தீவு குறித்து பொய்க்கதைகளைக் கட்டவிழ்த்து தன்னை தற்காத்துக்கொள்ள பிரதமர் மோடி முயல்கிறார். எல்லைப் பிரச்னையைத் தீர்க்க சீனத் தரப்புடன் 19 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும், பிரதமர் மோடியால் சீனாவின் மீது ராஜாங்க ரீதியில் செல்வாக்கை செலுத்த முடியவில்லை. இந்திய பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டுவதை பிரதமர் மோடியால் தடுத்துநிறுத்த முடியவில்லை’ என்று விமர்சித்திருக்கிறார்.

மேலும், ‘டோக்லாம் மற்றும் கல்வான் பிரச்னைகளுக்குப் பிறகு லடாக்கில் 2000 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு இந்திய பகுதிகளை ஆக்கிரமித்த சீனா, அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் பல அத்துமீறல்களில் ஈடுபட்டது. இவ்வளவு நடந்தும், எதுவும் நடக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார்’ என்று விமர்சித்திருக்கிறார் கார்கே.
சீனா விவகாரத்தை காங்கிரஸ் கையிலெடுத்த நிலையில், அதற்கு உரிய பதிலைத் தரமுடியாமல் பா.ஜ.க-வினர் தவிக்கிறார்கள். வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர், ‘உங்கள் வீட்டின் பெயரை நான் மாற்றினால் அது என்னுடையதாகிவிடுமா? பெயர்களை மாற்றுவதால் எதுவும் மாறிவிடாது’ என்று கூறியிருக்கிறார். ஒரு வீட்டின் பிரச்னையையும், ஒரு தேசத்தின் இறையாண்மையையும் சமதளத்தில் வைக்க முடியுமா?! காலம் தான் பதில் சொல்லும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

