இன்றைய சூழலில் கிரிக்கெட் விளையாட்டில் உலக அளவில் தவிர்க்க முடியாத வீரர் விராட் கோலி. 2028 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கிரிக்கெட் சேர்ப்பதற்கும் இவர் அந்த விளையாட்டில் செய்ததும் காரணமாக சொல்லப்படுகிறது.
பெங்களூரு அணி கடந்த 5 போட்டிகளில் வெற்றி பெற்று உற்சாகமாக அடுத்து சென்னை அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. வாழ்வா சாவா என்ற நிலையில் தொடர் வெற்றிகளை குவித்து வரும் பெங்களூரு அணியின் நிகழ்ச்சி ஒன்றில், விராட் கோலி சொன்னது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
எது உங்களை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் முன்னேற செய்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், “அது மிகவும் எளிது. அனைத்து வீரர்களை போல எனக்கும் ஓய்வு பெறும் நாள் உள்ளது. அன்று, நான் அந்த போட்டியில் அதை செய்திருக்கலாமே என்று யோசிக்க கூடாது. இப்போது விட்டுவிட்டு அன்று நான் வருந்த கூடாது. நிச்சயமாக வருந்தவும் மாட்டேன்” எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க:
‘அடுத்த ஐபிஎல் ஏலத்தில் இவரை எடுக்க கடும் போட்டி இருக்கும்’ – இளம் வீரரை வியந்து பாராட்டும் கங்குலி..
மேலும் பேசிய அவர், “நான் ஓய்வை அறிவித்த பிறகு, நான் ஒரு நீண்ட இடைவெளி எடுக்கப்போகிறேன். நீங்கள் என்னை சிறிது நாட்களுக்கு பார்க்கமாட்டீர்கள்” என தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது விராட் கோலி ரசிகர்களை கவலையடைய செய்திருக்கிறது. சச்சின், தோனி, என பல ஜாம்பவான்கள் ஓய்வை அறிவித்த பிறகு கிரிக்கெட் பாப்பதை நிறுத்திய ரசிகர்களை போல விராட் கோலி ரசிகர்களும் கிரிக்கெட் பார்ப்பதை கைவிட்டால், பல ரசிகர்களை இன்றைய கிரிக்கெட் உலகம் இழக்கக்கூடும் என்பது சந்தேகமில்லை.
வரும் சனிக்கிழமை இரவு பெங்களூரு அணி சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே பெங்களூரு பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)