Last Updated:
40 வயதுக்கு மேற்பட்டவர்களை நிறுவனங்கள் நேரடியாக பணிநீக்கம் செய்வதில்லை. ஆனால், நிறுவனங்களால் புதிய அணிகள் உருவாக்கப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளில் கார்ப்பரேட் துறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதிகரித்து வரும் வேலை நேரம், அழுத்தம் மற்றும் மாறிவரும் சூழ்நிலைகள் காரணமாக, 60 வயது வரை வேலை செய்வது மக்களுக்கு கடினமாகி வருகிறது.
இதன் விளைவாக, நாட்டின் வேகமாக மாறிவரும் கார்ப்பரேட் துறையில் 60 வயது வரை வேலை செய்யும் எண்ணம் மெதுவாக மறைந்து வருகிறது. 40 வயதிலேயே தொழில் வல்லுநர்கள் அழுத்தத்தை உணர்கிறார்கள். இது குறித்து முதலீட்டு வங்கியாளரும், ஆலோசகருமான சர்தக் அஹுஜா கூறியதாவது, “இந்த மாற்றம் ஒரு யதார்த்தம் மற்றும் கவலைக்குரிய விஷயம்” என்று கூறியுள்ளார். இந்திய நிறுவனங்களில் ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 45ஆகக் குறைந்து வருவது மிகவும் கவலையளிக்கும் ட்ரெண்ட் என்றும், இது நல்லதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டம் அல்லது மருத்துவம் போன்ற துறைகளில், வயதுக்கு ஏற்ப மரியாதை மற்றும் வருமானம் அதிகரிக்கிறது. ஆனால், கார்ப்பரேட் துறையில், சேல்ஸ், மார்க்கெட்டிங், ஆபரேஷன், ப்ராடக்ட் மற்றும் டெக்னாலஜி போன்றவற்றில் இதற்கு நேர்மாறாக நடக்கிறது. இது குறித்து அஹுஜா கூறியதாவது, “இந்தத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் காலாவதியாகிவிட்டதாக நம்புகின்றனர். அவர்கள் புதிய திறன்களுடன் புதுப்பிக்கப்படுவதில்லை. மேலும், இளைய ஊழியர்களைப் போல வேகமாக வேலை செய்வதில்லை. மேலும், இளம் ஊழியர்கள் குறைந்த பணத்தில் அதிக வேலை செய்கிறார்கள்.”
40 வயதுக்கு மேற்பட்டவர்களை நிறுவனங்கள் நேரடியாக பணிநீக்கம் செய்வதில்லை. ஆனால், நிறுவனங்களால் புதிய அணிகள் உருவாக்கப்படுகின்றன. அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். புதிய அணிகளுக்கு அதிக வளங்களை வழங்குவதன் மூலம் அவை கவனம் செலுத்தப்படுகின்றன. “நிறுவனங்கள் பழைய ஊழியர்களை ஓரங்கட்டிவிட்டு இளைஞர்களை மையமாகக் கொண்டுள்ளன” என்றும் அஹுஜா கூறினார். இதன் காரணமாக, 40 வயதுடையவர்கள் கார்ப்பரேட் வேலைகளுக்குப் பிறகு வாழ்க்கைக்குத் தயாராகி வருகின்றனர்.
அஹுஜாவின் கூற்றுப்படி, “சார்ட்டர்டு அக்கௌன்டன்ட் அலுவலகங்களில் LLP பதிவுகள் அதிகரித்து வருகின்றன. மக்கள் 40 வயதில் கன்சல்டிங் நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். ஆனால், அது ஆர்வத்தால் அல்ல, மாறாக பேக்அப் திட்டமாகவே தொடங்குகிறது. இந்த தொழில்முனைவு லட்சியத்தால் அல்ல, பயத்தால் ஏற்படுகிறது” என்று அஹுஜா கூறுகிறார். இருப்பினும், தொழில்முனைவில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும், ஆனால், இது விருப்பத்தால் நடக்காது, மாறாக கார்ப்பரேட் துறையிலிருந்து மக்கள் சீக்கிரமாக ஓய்வு பெறுவதால் கட்டாயத்தால் நடக்கும்.
40 வயதுகளில் உள்ளவர்களுக்கு திறன் மேம்பாட்டு மையங்களுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும் அஹுஜா கூறினார். இதில், மக்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் முன்னேறுகிறார்கள் அல்லது மற்றவர்கள் அவ்வாறு செய்ய உதவுகிறார்கள்.
May 11, 2025 11:48 AM IST


