இந்த நிலையில், ஒளரங்கசீப் கல்லறையை பாதுகாக்க வலியுறுத்தி அந்த கல்லறை அமைந்துள்ள வக்ஃப் சொத்தின் பராமரிப்பாளரும், கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் வழித் தோன்றலுமான யாகூப் ஹபீபுதீன் ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் பாதுகாப்புச் சட்டம் 1958 இன் கீழ் ஒளரங்கசீப்பின் கல்லறை பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், இந்த சட்ட விதிகளின்படி, ஒளரங்கசீப் கல்லறையை அகற்றவோ, அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளவோ முடியாது, அத்தகைய நடவடிக்கைகள் தண்டனைக்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ”திரைப்படங்கள், ஊடகங்கள் மற்றும் சமூக தளங்கள் மூலம் வரலாற்றைத் தவறாக சித்தரிப்பதன் காரணமாக, மக்களின் உணர்வுகளை கையாள்வதற்கு வழிவகுத்தது, இதன் விளைவாக தேவையற்ற போராட்டங்கள், வெறுப்பு பிரசாரங்கள் மற்றும் உருவ பொம்மைகளை எரித்தல் போன்றவை நடந்தன.
இந்த விவகாரத்தில் சர்வதேச சட்ட விதிகளின்படி, இந்திய அரசுக்கும் தொல்லியல் துறைக்கும் உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

