Last Updated:
டெலிகாம் துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் மாறியுள்ளது.
ஒரே மாதத்தில் 2 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை பெற்று டெலிகாம் சேவையில் ஜியோ புதிய சாதனை ஏற்படுத்தியுள்ளது.
டெலிகாம் துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் மாறியுள்ளது. போட்டி நிறுவனங்களை விடவும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா, வாய்ஸ்கால் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை வழங்குகிறது ஜியோ.
இதனால் மற்ற நெட்வொர்க்குகளில் இருந்து ஜியோவுக்கு மாறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மார்ச் மாதத்தில் மட்டும் ஜியோ 21.4 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக இந்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான TRAI தெரிவித்துள்ளது.
புதிய சந்தாதாரர்களின் அடிப்படையில் ஜியோவின் ஒட்டுமொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 46.97 கோடியாக உயர்ந்துள்ளது.
இதேபோன்று ஏர்டெல் நிறுவனம் மார்ச் மாதம் 12.50 லட்சம் புதிய சந்தாதாரர்களை பெற்ற நிலையில் அதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 38.98 கோடியாக உயர்ந்திருக்கிறது.
May 07, 2025 10:21 PM IST
ஒரே மாதத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்கள்.. டெலிகாம் சேவையில் ஜியோ சாதனை


