புளோரிடாவில் வளைகுடா கடற்கரையில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் சுறாக்களால் மூன்று தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று வட மேற்கு புளோரிடாவில் உள்ள வால்டன் கவுண்டியில் ஒரு பெண்ணை சுறா தாக்கியது. இதனால் அந்த பெண்ணின் கையின் ஒரு பகுதியை துண்டாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இச்சம்பவம் நடந்து இரண்டு மணி நேரத்திற்குள் மற்றொரு சம்பவம் நடந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கே நான்கு மைல் தொலைவில் கடற்கரையில் சுமார் 15 வயதுடைய இரண்டு பெண்கள் தங்களின் நண்பர்களுடன் கடலில் விளையாடி மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

