• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஒரே நாளில் பள்ளி படிப்பை முடித்து சான்றிதழ்! ஜப்பானின் சூப்பர் திட்டம்

GenevaTimes by GenevaTimes
December 13, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
ஒரே நாளில் பள்ளி படிப்பை முடித்து சான்றிதழ்! ஜப்பானின் சூப்பர் திட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பள்ளிக் காலம் கடந்து நீண்ட காலம் ஆனபிறகே மீண்டும் ஒருமுறை அந்தப் பள்ளிக்குச் சென்று மாணவனாக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இந்த ஆசை நடக்காது அல்லவா? இருப்பினும், ஜப்பானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இப்போது அத்தகைய ஒரு வாழ்க்கையை அனுபவிக்க முடியும். “ஒரு நாள் மாணவர்” என்று அழைக்கப்படும் ஒரு புதிய திட்டம், மாணவர்களை ஒரு நாள் ஜப்பானிய பள்ளியில் படிக்க வைக்கிறது. ஜப்பானின் சிபா ப்ரிபெக்சரில் உள்ள ஒரு பழைய பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை நீங்கள் வெறும் ரூ.17,000-க்கு பெறலாம்.

விளம்பரம்

அதாவது ரூ.17,000 (30,000 யென்) செலுத்திய பிறகு, ஜப்பானில் உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளூர் பள்ளியில் மாணவராக ஒரு நாளைக் கழிக்கலாம். இந்த ‘மாணவர்கள்’ இந்த திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக கையெழுத்து, கட்டானா சண்டை, உடற்கல்வி மற்றும் பல கற்றல் நடவடிக்கைகள் போன்ற பல செயல்பாடுகளை அனுபவிக்க முடியும். உண்டோகயா என்ற நிறுவனத்தால் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஜப்பானில் உள்ள சிபா ப்ரிபெக்சரில் உள்ள ஒரு பழைய பள்ளியை நிறுவனம் இதற்காகத் தயாரித்துள்ளது. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் நடத்தப்படுகிறது.

விளம்பரம்

சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் என்றாலும், ஜப்பானில் உள்ள கலாச்சாரம் மற்றும் கல்வி முறைகளுக்கு வெளிநாட்டவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும் இது முக்கியத்துவம் அளிக்கிறது. பங்கேற்பாளர்களுக்கு பள்ளி சீருடைகள் வழங்கப்படுகின்றன, அந்த சீருடையை அணிந்து கொண்டு கிளப் நடவடிக்கைகளில் பங்கேற்கின்றனர் மற்றும் ஜப்பானின் தனித்துவமான பள்ளி கலாச்சாரத்தை அறிமுகப்படுத்துகின்றனர்.

நீங்கள் புறக்கணிக்கக் கூடாத கல்லீரல் பாதிப்பின் 10 ஆரம்பகால அறிகுறிகள்.!


நீங்கள் புறக்கணிக்கக் கூடாத கல்லீரல் பாதிப்பின் 10 ஆரம்பகால அறிகுறிகள்.!

பள்ளிக்கு வருபவர்கள் கிளாசிக் ஸ்கூல் யூனிஃபார்ம் அல்லது சூட் அணிய வேண்டும். இதனையடுத்து அங்குள்ள ஆசிரியர்கள், பங்கேற்பாளருக்கு எழுத்துக்கலை, பேரிடரில் இருந்து தப்பிக்கும் பயிற்சி, அவசரகால திறன்கள் மற்றும் பாரம்பரிய ஜப்பானிய நடனங்கள் உள்ளிட்ட வகுப்புகளை நடத்துகிறார்கள். மேலும் கட்டானை (சாமுராய் பயன்படுத்தும் வாள்) எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றியும் இங்கு பயிற்சி அளிக்கப்படும். மேலும் குழந்தைகளுக்கு கற்பிப்பதற்கான நடைமுறை அறிவும் வழங்கப்படும்.

விளம்பரம்

இது தவிர, ஜப்பானில் எப்போதும் நிலநடுக்கம் ஏற்படுகிறது. அப்படி நிலநடுக்கம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். எந்த வயதினரும் ஒரு நாள் இங்கு மாணவராகலாம். ஆனால், ஒரு நாளில் 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மதிய உணவுக்குப் பிறகு, பங்கேற்பாளர்கள் விளையாட்டு மற்றும் பிற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

ஜப்பானில் யாங்கி என்று அழைக்கப்படும் ஒரு துணை கலாச்சாரம் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அவர்கள் யாங்கி கலாச்சாரத்தையும் கற்றுக் கொள்கிறார்கள். நிகழ்ச்சியின் முடிவில், அனைவருக்கும் பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படும். நிகழ்ச்சியின் முடிவில் பங்கேற்பாளர்கள் வகுப்பறையை சுத்தம் செய்ய வேண்டும், இது ஜப்பானிய கலாச்சாரத்தின் மிக முக்கியமான பகுதியாகும். இது போன்ற நிகழ்ச்சிகள் ஜப்பானை உலகம் முழுவதும் பிரபலமாக்குகின்றன.

.

Read More

Previous Post

முதிவர்களின் மருத்துவ செலவுகளை ஏற்கும் ஆயுஷ்மான் அட்டை.. விண்ணப்பிப்பது எப்படி? – News18 தமிழ்

Next Post

அல்லு அர்ஜுனை கைது செய்த போலீஸ்.. வீட்டில் இருந்து அழைத்துச் சென்று விசாரணை | Makkal Osai

Next Post
அல்லு அர்ஜுனை கைது செய்த போலீஸ்.. வீட்டில் இருந்து அழைத்துச் சென்று விசாரணை | Makkal Osai

அல்லு அர்ஜுனை கைது செய்த போலீஸ்.. வீட்டில் இருந்து அழைத்துச் சென்று விசாரணை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin