ஒரே ஓவரில் 43 ரன்களை விட்டுக்கொடுத்த மோசமான சாதனையை இங்கிலாந்து வீரர் ஆலி ராபின்சன் நிகழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ளூர் போட்டிகளான கவுன்டி கிரிக்கெட்டில், sussex – leicestershire அணிகளுக்கு இடையே அண்மையில் டெஸ்ட் போட்டி நடந்தது. முதலில் ஆடிய சசக்ஸ் அணி முதல் இன்னிங்க்சில் 442 ரன்களும், எதிரணி 275 ரன்களும் எடுத்திருந்தன. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்க்சை ஆடிய சசக்ஸ் அணி 296 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்த நிலையில் 464 ரன்களை இலக்காக கொண்டு leicestershire அணி, இரண்டாவது இன்னிங்சில் களம் கண்டது.
அப்போது சசக்ஸ் அணிக்காக விளையாடிய பிரபல வீரர் ஆலி ராபின்சன் 59 ஆவது ஓவரை வீச, லுயிஸ் கிம்பர் பந்துகளை பதம் பார்க்க தொடங்கினார். நோ-பால்களுடன் ராபின்சன் வீசிய 9 பந்துகளில் 2 சிக்சர்கள், 6 பவுண்டரிகளை பறக்கவிட்டார் லுயிஸ். கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே எடுக்கப்பட்டது.
43 runs is the record for the most runs off an over in County Championship’s 134 year history https://t.co/MMHTRMA9F2
— Vitality County Championship (@CountyChamp) June 26, 2024
கவுன்ட்டி கிரிக்கெட் விதிப்படி நோபால்களுக்கு 2 ரன்கள் எதிரணிக்கு வழங்கப்படுகிறது. அவர் அந்த ஓவரில் 3 நோபால்கள் விசியதால் 6 ரன்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. இதனால் மொத்தம் 43 ரன்கள் leicestershire அணிக்கு கிடைத்தது.
இதையும் படிக்க:
டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை… 601 நாட்களுக்கு பின் முதலிடத்தை இழந்த சூர்யகுமார்..
134 ஆண்டுகள் கவுன்ட்டி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் 43 ரன்கள் இதுவரை யாரும் விட்டுக்கொடுக்காத நிலையில், ஆலி ராபின்சன் அந்த மோசமான சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் சோயப் பஷீர் சர்ரே மற்றும் வொர்செஸ்டர்ஷைர் அணிகளுக்கிடையேயான போட்டியில் 38 ரன்களை விட்டுக்கொடுத்தார், அப்போது அதுவே மோசமான பவுலிங்காக பார்க்கப்பட்டது. ஆனால் அந்த மோசமான சாதனையை படைத்த இரண்டே நாட்களில் ஆலி ராபின்சன் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
இதுவரை இந்திய ஜாம்பவான்களான விராட் கோலி, ரோகித் சர்மாவை 3 முறை விக்கெட் எடுத்த ஆலி ராபின்சனுக்கு இந்த நிலையா என ரசிகர்களும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
