சாட்ஜிபிடியில் புதிய அம்சமாக செய்யறிவு நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை ஓவியமாக மாற்றும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட புதிய ஜிபிடி – 4.0 என்னும் புகைப்பட ஊக்கியின் மூலம் ஜிப்லி சேவை வழங்கப்படுகிறது.
இதன்மூலம் பயனர்கள் வழங்கும் புகைப்படங்களில் உள்ள உருவங்கள் மற்றும் பின்னணிகளை ஓவியமாக மாற்றி, ஜிப்லி வழங்குகிறது. இது பெரும்பாலும் அனிமி எனப்படும் ஜப்பான் கார்ட்டூன் கதாபாத்திர வடிவை பிரதிபலிக்கிறது.
சாட்ஜிபிடியை கட்டணமின்றி பயன்படுத்திவரும் பயனர்களுக்கும் ஜிப்லி அம்சத்தை பயன்படுத்தும் வசதியை ஓபன்ஏஐ வழங்கியுள்ளது. இதனால் பலதரப்பட்ட மக்கள் தங்கள் புகைப்படங்களை ஜிப்லியில் ஓவியமாக மாற்றி பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
சாட்ஜிபிடியில் மார்ச் 29ஆம் தேதி தொடங்கி எப்ரல் 1ஆம் தேதி ஜிப்லி பயன்பாடு முழுமையடைந்தது.
இது குறித்து ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
26 மாதங்களுக்கு முன்பு சாட்ஜிபிடி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மக்களால் வெறித்தனமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் வைரல் நிகழ்வைக் காண்கிறேன். கடந்த 5 நாள்களில் 10 லட்சம் பயனர்களை எட்டியுள்ளோம். ஆனால், இன்று கடந்த ஒரு மணிநேரத்தில் 10 லட்சம் பயனர்களை அடைந்துள்ளோம் எனப் பதிவிட்டுள்ளார்.

