கவுன்டி ஊழியர்கள் இந்த மென்பொருளுக்கு இன்னமும் பழக்கப்படவில்லை எனக் கூறியுள்ளனர். இந்த மென்பொருளால் ஊதியத்தில் பிழை ஏற்படுவது இது முதன்முறை அல்ல. கடந்த ஆகஸ்ட் மாதம் கிட்டத்தட்ட 100 காவலர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கவுன்டி நிர்வாகம் மேம்பட்ட ஊதிய முறையைப் பின்பற்ற வேண்டும் அல்லது ஊழியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்பட வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.
தவறுதலாக 1.6 மில்லியன் டாலர் சம்பளம் பெற்று, ஒரு நாள் கோடீஸ்வரியாக வாழ்ந்த கவுன்டி ஊழியர், நேர்மையாக அதைத் திருப்பிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.

