• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஒரு குடும்பத்தில் எத்தனை சுகன்யா சம்ரிதி கணக்குகளை தொடங்கலாம்…? பலருக்கு தெரியாத தகவல்… | வணிகம்

GenevaTimes by GenevaTimes
November 2, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஒரு குடும்பத்தில் எத்தனை சுகன்யா சம்ரிதி கணக்குகளை தொடங்கலாம்…? பலருக்கு தெரியாத தகவல்… | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கணக்குகளைத் தொடங்குதல்

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டமானது, பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கைத் திறக்க அனுமதிக்கிறது. இரண்டு மகள்கள் இருந்தால், ஒரு குடும்பத்தில் இரண்டு கணக்குகள் இந்தத் திட்டத்தின் கீழ் தொடங்கப்படலாம். எனவே, உங்களுக்கு இரண்டு மகள்கள் இருந்தால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்று என நீங்கள் இரண்டு தனித்தனி சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்குகளைத் தொடங்கலாம்.

ஒரே சமயத்தில் பல பிறப்புகள் போன்ற விதிவிலக்கான நிகழ்வுகளுக்கும் விதிகள் உள்ளன. ஒரு தாய் இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அல்லது மூன்று குழந்தைகளை ஒரே சமயத்தில் பெற்றெடுத்தால், முதல் பெண் குழந்தைக்குப் பிறகு இரண்டுக்கும் மேற்பட்ட பல கணக்குகளைத் திறக்கலாம். இதிலுள்ள முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்தவொரு குழந்தையும் அவர்களின் பிறப்பு சூழ்நிலை காரணமாக இந்தத் திட்டத்திலிருந்து நீக்கப்படக் கூடாது.

டெபாசிட் வரம்புகள் நிலையானது

இரண்டு சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்குகள் திறக்கப்பட்டாலும், அனைத்து கணக்குகளிலும் அதிகப்பட்ச வைப்புத்தொகை ஆண்டுக்கு ரூ.1.5 லட்சமாகவே இருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பொருளாதார வலிமை மற்றும் எதிர்கால தேவைகளைப் பொறுத்து இந்தத் தொகையை ஒவ்வொரு கணக்குகளுக்கு இடையில் பிரித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு கணக்கிலும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ரூ.250 செலுத்தப்பட வேண்டும்.

நீண்ட கால சேமிப்பிற்கு இது ஏன் முக்கியமானது?

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டமானது சிறுசேமிப்புத் திட்டங்களிலேயே மிக அதிகமாக ஆண்டுதோறும் 8.2 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதுமட்டுமின்றி வருமான வரிச் சட்டப் பிரிவு 80Cஇன் கீழ் வரிச் சலுகை மற்றும் முதிர்வு தொகையுடன் வரி விலக்கு என பெண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்கு நல்ல நிதி அடித்தளத்தை உருவாக்குவதில் இது ஒரு மதிப்புமிக்க கருவியாக உள்ளது.

பெற்றோருக்கான முக்கிய அறிவுரை

உங்களுக்கு இரண்டு மகள்கள் இருந்தால் இரண்டு சுகன்யா சம்ரிதி கணக்குகளைத் தொடங்கலாம். ஆனால், மொத்த வருடாந்திர வைப்புத்தொகை வரம்பு ₹1.5 லட்சம் மட்டுமே. பெற்றோர்கள் வைப்புத் தொகையை புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டால், அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த நீண்டகால சேமிப்புத் திட்டத்தின் கீழ் இரு குழந்தைகளும் சமமான பங்கைப் பெற முடியும்.

சில கேள்விகளும், பதில்களும்:

தாத்தா பாட்டி தங்கள் பேத்திகளுக்கு சுகன்யா சம்ரிதி கணக்குகளைத் தொடங்க முடியுமா?

இல்லை. பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மட்டுமே கணக்கைத் தொடங்கி இயக்க அனுமதிக்கப்படுவார்கள். பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு வைப்புத் தொகைக்காக தாத்தா பாட்டி பணம் கொடுப்பதன் மூலம் மறைமுகமாக பங்களிக்க முடியும்.

ஒரு குடும்பம் தவறுதலாக இரண்டுக்கும் மேற்பட்ட கணக்குகளைத் திறந்தால் என்ன நடக்கும்?

அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிகமான கணக்குகள் திறக்கப்பட்டால், கூடுதல் கணக்குகள் செல்லாததாகக் கருதப்படும். அத்தகைய கணக்குகளில் செய்யப்படும் வைப்புத்தொகை எந்த வட்டியும் இல்லாமல் திருப்பித் தரப்படும். எனவே, விதிகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இரண்டு கணக்குகளுக்கும் வருடாந்திர ரூ.1.5 லட்சம் வைப்பு வரம்பை வரி விலக்காகக் கோர முடியுமா?

ஆம், இரண்டு கணக்குகளிலும் சேர்த்து ரூ.1.5 லட்சம் வரையிலான வைப்புத்தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80Cஇன் கீழ் விலக்குக்குத் தகுதி பெறலாம். இருப்பினும், வரம்பு ஒட்டுமொத்தமானதுதானே தவிர ஒரு கணக்கிற்கு அல்ல. அதாவது ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியாக ரூ.1.5 லட்சம் கோர முடியாது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 09, 2025 4:15 PM IST

Read More

Previous Post

IND vs AUS : வாஷிங்டன் சுந்தர் அபார பேட்டிங்.. 3ஆவது டி20-யில் ஆஸி.-யை வென்றது இந்திய அணி | விளையாட்டு

Next Post

பொருளாதாரக் கொள்கையில் மலேசியாவின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்கிறது: தூதர் – Malaysiakini

Next Post
பொருளாதாரக் கொள்கையில் மலேசியாவின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்கிறது: தூதர் – Malaysiakini

பொருளாதாரக் கொள்கையில் மலேசியாவின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்கிறது: தூதர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin