ஒரு ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில் அதற்கு ஈரானும் தகுந்த பதிலடியை கொடுத்துள்ளது.
Fox News செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ட்ரம்ப், “ஈரானில் எண்ணெய் குழாய்கள் ஏதாவது ஒரு காரணத்தால் மூடப்பட்டால் அந்த குழாய் வெடித்து விடும்.
மிகவும் சக்திவாய்ந்த விளைவுகளுக்கு வழிவகுக்கும்
எண்ணெய் குழாய்களில் இருந்து கொள்கலன்களிலோ அல்லது கப்பல்களிலோ நிரப்ப முடியாது.
எண்ணெய் குழாய் வெடித்து சிதறினால் அதனை முன்பிருந்ததைபோல மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. இது மிகவும் சக்திவாய்ந்த விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் தலைமை என்னை அணுகலாம். அவர்கள் பேச விரும்பினால் எங்களை அழைக்கலாம்” என்று தெரிவித்தார்.
ஈரான் தரப்பிலிருந்து பதிலடி
ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் தரப்பிலிருந்து அதற்குப் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
ஈரானிய எரிசக்தி மேம்படுத்தல் மற்றும் மேலாண்மை அமைப்பின் தலைவரான இஸ்மாயில் சகப் எஸ்பஹானி தனது எக்ஸ் பதிவில்,

“இந்த முற்றுகையின் விளைவாக, எண்ணெய் கிணறுகள் உட்பட எங்களது உள்கட்டமைப்பிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவளிக்கும் நாடுகளின்(வளைகுடா நாடுகளில்) அதே போன்ற உள்கட்டமைப்பின் மீது, எங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை விட நான்கு மடங்கு சேதத்தை நாங்கள் ஏற்படுத்துவோம் என்று உறுதியளிக்கிறோம்.
எங்கள் கணிதம் வேறு: 1 எண்ணெய் கிணறு = 4 எண்ணெய் கிணறுகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

