• Login
Friday, August 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல்? முழுமையான தகவல்!

GenevaTimes by GenevaTimes
March 27, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல்? முழுமையான தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நெருங்கிய தரப்பினருக்கு அறிவித்துள்ளதாகவும், தனது அமைச்சரவையிலும் அதனை சூசகமாக தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு அமைச்சரவைக் கூட்டங்களிலும் ஜனாதிபதி விக்ரமசிங்க தேர்தல் குறித்து கலந்துரையாடியதாகவும், திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என சூசகமாக தெரிவித்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஒக்டோபர் முதல் வாரத்தில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய மூன்று முக்கிய வேட்பாளர்கள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது சொந்த வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படாத நிலையில், அது ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முகாம் ஏற்கனவே பிளவுபட்டுள்ளதுடன், சில உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக ஏற்கெனவே உறுதியளித்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கடந்த சில வாரங்களாக நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. கடந்த வாரம் பசில் ராஜபக்சவும் ஜனாதிபதி விக்ரமசிங்கவை சந்தித்து பொதுத் தேர்தல் குறித்து பேசிய போதிலும், ஜனாதிபதி தனது முடிவில் உறுதியாக இருந்ததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகத் தெரிகிறது. .

பாராளுமன்ற தேர்தலுக்கு பதிலாக ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துமாறு ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு நெருக்கமான ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியாக வலுவான பிரச்சாரத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலில் 3.9 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவர் வெற்றிபெற வேண்டுமானால், அடுத்த தேர்தலில் குறைந்தபட்சம் 50 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாகப் பெறுவதற்கு அவர் தனது வாக்காளர் தளத்தை கடுமையாக அதிகரிக்க வேண்டும்.

2019 தேர்தல் போட்டியில் 40 வீத வாக்குகளைப் பெற்ற சஜித் பிரேமதாசவும் தனது பிரசாரத்தை தொடர்வார், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அவருக்கு 50 வீதத்தை விட அதிகம் பெற பாரிய பிரசாரம் தேவைப்படும்.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற வேண்டுமாயின் அவர் பாரிய தேர்தல் பிரசாரத்திற்கு தயாராக வேண்டும்.

கடந்த தேர்தலில் ஐ.தே.க தோற்கடிக்கப்பட்ட நிலையில், அவரது பிரசாரம்  குறிப்பாக அடிமட்ட அளவில், வலுவாக இருக்க வேண்டும். (News21)





நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02

NEWS21

நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்…

NEWS21

நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்…

Read More

Previous Post

தமிழ், சீன-பள்ளிகள் தொடரும், மேலும் 20,171 ஆசிரியர்கள் நியமனம் – கல்வி அமைச்சர் – Malaysiakini

Next Post

அரவிந்த் கெஜ்ரிவாலை ED காவலில் இருந்து விடுவிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு

Next Post
அரவிந்த் கெஜ்ரிவாலை ED காவலில் இருந்து விடுவிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு

அரவிந்த் கெஜ்ரிவாலை ED காவலில் இருந்து விடுவிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin