
இன்றைய டி20 கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் அடிமைகளைப் போல நடத்தப்படுகிறார்கள் எனப் புகழ்பெற்ற சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பகிர்ந்து கொண்ட கருத்துகள் வருமாறு:
“இன்றைய டி20 கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமான சூழல் ஆடுகளங்களில் இல்லை. ஐ.பி.எல். இப்போது ஒரு பெரிய வணிகமாக மாறிவிட்டது. ரசிகர்கள் மற்றும் விளம்பரதாரர்களைக் கவர்வதற்காகவே, அதிரடியாக ரன்களைக் குவிக்கும் வகையில் தட்டையான ஆடுகளங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் பந்துவீச்சாளர்கள் வெறும் அடிமைகளைப் போலவே நடத்தப்படுகின்றனர்.”

