பாகிஸ்தானுக்கு கடன் அளிக்க சா்வதேச நிதியம், ஆசிய வளா்ச்சி வங்கி, உலக வங்கி ஆகியவை ஒப்புதல் அளிப்பது அந்நாட்டின் ராணுவ செலவினத்தைத்தான் அதிகரிக்கும். அவ்வாறு பெறும் கடன்களை இந்தியா்களுக்கு எதிராகப் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட அந்நாட்டின் வஞ்சக ராணுவம் பயன்படுத்துகிறது.

