சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு இயக்குநராக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மீண்டும் (Kristalina Georgieva) தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (12) இடம்பெற்ற நிர்வாகக்குழு தேர்வின் போதே இவர் இரண்டாவது முறை தெரிவுசெய்யப்பட்டுள்ளார், அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் அவர் உத்தியோகபூர்வமாக தனது இரண்டாவது ஐந்தாண்டு சேவையை நிகழ்த்த உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக கிறிஸ்டலினா கருத்துத் தெரிவிகையில்,
தொடர்ச்சியான அதிர்ச்சிகள்
“190 உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நாணய நிதியத்தின், நிர்வாகக் குழுவின் நம்பிக்கை மற்றும் ஆதரவிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன், மேலும் சர்வதேச நாணய நிதியத்தினை இரண்டாவது ஐந்தாண்டு காலத்திற்கு நிர்வாக இயக்குநராகத் தொடர்ந்து வழிநடத்துவதில் பெருமைப்படுகிறேன்.

அண்மைய ஆண்டுகளில், தொற்றுநோய், போர்கள், மோதல்கள் மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடி உள்ளிட்ட தொடர்ச்சியான அதிர்ச்சிகளை வழிநடத்த சர்வதேச நாணய நிதியம் எங்கள் உறுப்பு நாடுகளுக்கு உதவியுள்ளது.
காலநிலை மாற்றம், பலவீனம், மோதல்கள் மற்றும் டிஜிட்டல் ஆகியவற்றில் எங்கள் முயற்சிகளை நாங்கள் தீவிரப்படுத்தியுள்ளோம், மக்ரோ பொருளாதாரம், நிதி நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கான வளர்ந்து வரும் முக்கியத்துவத்துடன் சர்வதேச நாணய நிதியம் இணைந்து பணியாற்றுகிறது.
திடீர் மாற்றங்கள்
அதிக நிச்சயமற்ற தன்மை மற்றும் திடீர் மாற்றங்களை நிர்வகிக்கும் நாடுகளின் திறனை மேம்படுத்த சர்வதேச நாணய நிதியம் உதவுகிறது.

உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் நாடுகளுக்கு ஒத்துழைக்க மிகவும் பயனுள்ள, தீர்க்கமான மற்றும் வரவேற்பு மன்றமாக இருக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.” என்றார்.
தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்புள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களுடன் சேர்ந்து எங்கள் உறுப்பினர்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய நான் ஆவலுடன் உள்ளேன் என்று அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

