[ad_1]
பாலிவுட் நட்சத்திரம் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது பிரபல தன்மை உரிமைகள் (Publicity & Personality Rights) காப்பதற்காக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், தனது பெயர், புகைப்படங்கள் மற்றும் AI மூலம் உருவாக்கப்பட்ட போலியான, அவதூறான காட்சிகள் அனுமதியின்றி பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.மூத்த வழக்கறிஞர் சந்தீப் சேதி (Aishwarya-வுக்கு சார்பாக) நீதிமன்றத்தில் வாதாடியதாவது:
“ஐஸ்வர்யா ராயின் பெயர், உருவம், புகைப்படங்களை யாரும் தங்களது சுயநலத்திற்கு பயன்படுத்த உரிமையில்லை.””முழுமையாக போலியாக உருவாக்கப்பட்ட நெருக்கமான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.”
“ஒருவர், என் வாடிக்கையாளர் பெயர் மற்றும் முகத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார். கூடுதலாக, இவை சிலர் தங்களது பாலியல் ஆசையைத் திருப்தி செய்ய பயன்படுத்துகின்றனர். இது மிகுந்த மோசமானது.”
இதற்கு பதிலளித்த நீதி. தேஜஸ் காரியா,”அனுமதியின்றி ஐஸ்வர்யா ராய் பச்சனின் படங்கள் அல்லது உருவம் பயன்படுத்தும் இணைய தளங்களுக்கும், தனிநபர்களுக்கும் தடை விதிக்கப்படும்” எனக் குறிப்பிட்டார்.