Last Updated:
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, வேறு சில வெளிநாடுகளின் உதவிகளையும் ஐரோப்பா, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாடு எதிர்நோக்கி உள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள மெகா பவர் கட் சில நாடுகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டவுடன், விமான போக்குவரத்து சேவையும் முடங்கியது.
மின்விநியோகத்தை திரும்ப கொண்டு வருவதற்காக பணியாளர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த மின்தடை காரணமாக ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் முடங்கியுள்ளன. இது தொடர்பாக இரு நாடுகளிலும் உயர் மட்ட அமைச்சரவை கூட்டங்கள் நடைபெற்று, மெகா பவர் கட் பிரச்சனைக்கான தீர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த பவர் கட் பிரான்ஸ் நாட்டின் சில பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று ஸ்பெயின், போர்ச்சுகலின் பெரும்பாலான பகுதிகளில் தொலைபேசி தொடர்பு கொள்ளும் துண்டிக்கப்பட்டுள்ளன. ஸ்பெயின் நாட்டிற்கு ‘ரெட் எலக்ட்ரிகா’ என்ற நிறுவனமும், போர்ச்சுக்கல் நாட்டுக்கு ‘இ ரெடிஸ்’ என்ற நிறுவனமும் மின் சேவையை வழங்கி வருகின்றன.
ஐரோப்பிய மின்சார தொகுப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அதிக வோல்டேஜ் மின்சாரம் செல்லக்கூடிய இணைப்புகளில் பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பவர் கட்டாக இது பார்க்கப்படுகிறது. இதனால் மருத்துவமனையில் நோயாளிகளும் பாதிப்பு அடையக்கூடிய சூழல் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனை திரும்ப கொண்டு வருவதற்காக பணியாளர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இருப்பினும் எப்போது பவர் கட் சரியாகும் என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. சுமார் 2 கோடி ஐரோப்பிய மக்கள் இந்த மின் துண்டிப்பால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விரு நாடுகளின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே மொபைல் சேவை பயன்பாட்டில் உள்ளது.
இதையும் படிங்க – “தவறான தகவல்களை பரப்பி வரும் யூடியூப் சேனல்கள்…” – தடை விதித்த மத்திய அரசு
மற்ற பகுதிகளில் நெட்வொர்க் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, வேறு சில வெளிநாடுகளின் உதவிகளையும் ஐரோப்பா, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாடு எதிர்நோக்கி உள்ளது.
April 28, 2025 7:27 PM IST


