Last Updated:
கேரள, பெங்கால், குஜராத் போன்ற பல்வேறு உள்ளூர் கிரிக்கெட் அணிகளுக்குத் திறம்பட இவர் பயிற்சி அளித்துள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சாய்ராஜ் பஹுதுலே, ஐபிஎல் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வரவிருக்கும் 2026 ஐபிஎல் சீசனுக்கான பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் குழுவில் இந்த முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த ஒரு வீரர் மற்றும் பயிற்சியாளரான இவர் இணைந்திருப்பது, பஞ்சாப் அணியின் சுழற்பந்துவீச்சுப் பிரிவுக்குப் பெரும் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாய்ராஜ் பஹுதுலேவின் கிரிக்கெட் மற்றும் பயிற்சியாளர் அனுபவமானது இந்த பொறுப்புக்கு மிக முக்கியமான காரணம். இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் (Domestic Cricket) ஒரு தலைசிறந்த ஆல்-ரவுண்டராக இவர் திகழ்ந்தவர். முதல் தர கிரிக்கெட்டில் (First-Class Cricket) 6000-க்கும் மேற்பட்ட ரன்களையும் 630-க்கும் அதிகமான விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனையைப் படைத்துள்ளார்.
சர்வதேச அரங்கில், இந்தியாவுக்காக இரண்டு டெஸ்ட் மற்றும் எட்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவமும் இவருக்கு உள்ளது. பயிற்சியாளராகப் பஹுதுலேவுக்கு நீண்டகால அனுபவம் உண்டு. ஐபிஎல் ஃபிரான்சைஸிகளைப் பொருத்தவரை, இதற்கு முன்னர் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.
மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக அவர் பணியாற்றியுள்ளார். கேரள, பெங்கால், குஜராத் போன்ற பல்வேறு உள்ளூர் கிரிக்கெட் அணிகளுக்குத் திறம்பட இவர் பயிற்சி அளித்துள்ளார்.
தற்போதைய நியமனத்தைப் பொறுத்தவரை, பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்த சுனில் ஜோஷிக்கு மாற்றாக சாய்ராஜ் பஹுதுலே இந்தப் பொறுப்பை ஏற்கிறார். சுனில் ஜோஷி சமீபத்தில் தனது பொறுப்பிலிருந்து விலகி, பிசிசிஐ-யின் Centre of Excellence (CoE)-ல் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
October 23, 2025 4:59 PM IST


