Last Updated:
IPL 2025 | இன்றைய போட்டியில் ராஜஸ்தானின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. 3 பவுலர்கள் 50 ரன்களுக்கு வாரி வழங்கினர்.
ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான பந்துவீச்சு என்ற பெயரை பெற்றார் ராஜஸ்தான் அணியின் ஜோப்ரா ஆர்ச்சர்.
ஐதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆடிய அந்த அணி பவர்பிளேயான 6 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 94 ரன்களை குவித்தது. ட்ராவிஸ் ஹெட் 21 பந்துகளில் அரை சதம் விளாசி 67 ரன்களில் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் பந்துவீச்சை சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளால் வெளுத்து வாங்கிய இஷான் கிஷன், 45 பந்துகளில் சதம் அடித்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 106 ரன்களை எடுத்தார். நடப்பு சீசனில் முதல் செஞ்சுரியாக இது அமைந்தது. இதன் காரணமாக 20 ஓவர்களில் 286 ரன்கள் எடுத்துள்ளது. இது ஐபிஎல் தொடரின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.
இதற்கிடையே, இன்றைய போட்டியில் ராஜஸ்தானின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. 3 பவுலர்கள் 50 ரன்களுக்கு வாரி வழங்கினர். அதிலும் குறிப்பாக ராஜஸ்தானின் ஜோப்ரா ஆர்ச்சர், 4 ஓவர்கள் வீசி 76 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான பந்துவீச்சு என்ற பெயரை பெற்றார் ராஜஸ்தான் அணியின் ஜோப்ரா ஆர்ச்சர். இதற்கு முன்னர், 4 ஓவர்கள் வீசி 73 ரன்களை விட்டுக் கொடுத்து இந்த மோசமான சாதனைக்கு சொந்தக்காரரான இருந்த மோகித் சர்மா ஜோப்ரா ஆர்ச்சர் பின்னுக்கு தள்ளினார்.
இதற்கிடையே, இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 242 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 44 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 23, 2025 7:50 PM IST


