முன்னதாக, அர்ஷ்தீப் சிங் தனது இடது கை வேகப்பந்து வீச்சிற்காக அறியப்பட்ட ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார், மேலும் டி20 மற்றும் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் வடிவங்களில் அவரது செயல்திறன்களுக்காக கவனத்தைப் பெற்றுள்ளார். அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக விளையாடுகிறார் மற்றும் பல்வேறு இளைஞர் நிலைகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். ஐபிஎல் இல் கடந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் 2025 ஏலத்தில் ரைட் டூ மேட்ச் கார்டு மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அர்ஷ்தீப் சிங்கை வாங்க சிஎஸ்கே விருப்பபட்டது. அடுத்ததாக, சன்ரைசர்ஸ் ஐதராபாத் மிகவும் முயற்சி செய்தது. இறுதி வரை போராடியது. இறுதி வரை 18 கோடிக்கு வாங்க முயற்சி செய்தது. ஆனால், பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் அவரை ரைட் டூ மேட்ச் மூலம் வாங்கியது. இதன்மூலம், ஐபிஎல் 2025 ஏலத்தில் வாங்கப்பட்ட முதல் வீரர் ஆனார் அர்ஷ்தீப் சிங். அவர் ரூ.18 கோடிக்கு பிபிகேஎஸ் அணியால் வாங்கப்பட்டார்.

