ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தக்க வைக்கப்படும் வீரர்கள் குறித்த விபரங்களை அணி நிர்வாகம் இன்று மாலை வெளியிடுகிறது.
2025 ஐபிஎல் தொடரில் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்குள் retention பட்டியலை IPL ஆட்சிக் குழுவுக்கு அளிக்க வேண்டும். retain மற்றும் release செய்யப்படவுள்ள வீரர்கள் பட்டியலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை அணியை பொருத்தளவில் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, சிவம் துபே, பதிரனா ஆகியோர் தக்க வைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, திலக் வர்மா ஆகியோரும், கொல்கத்தா அணியில் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ரானா, ரின்கு சிங் ஆகியோரும் தக்க வைக்கப்படலாம்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ஹென்ரிச் கிளாசன், பேட் கம்மின்ஸ், அபிஷேச் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோரும், டெல்லி அணியில் அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பிரேசர் மெக்கர் ஆகியோருடன் அபிஷேக் போரெலும் தக்க வைக்கப்படலாம் என்று கூறப்படும்.
மேலும், டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து ரிஷப் பந்த் விடுவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
மற்ற அணிகளை பொருத்தளவில்,
பஞ்சாப் கிங்ஸ் : அர்ஷ்தீப் சிங், ஷஷாங்க் சிங், பிரசிம்ரன் கவுர்,
லக்னோ அணி : நிகோலஸ் பூரன்
குஜராத் டைட்டன்ஸ் : சுப்மன் கில்
ராஜஸ்தான் ராயல்ஸ் : சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சந்தீப் சர்மா, ரியான் பராக், ஜோஸ் பட்லர் ஆகியோர் பெரும்பாலும் ரிடென்ஷன் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் இன்று மாலை வெளியாகும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
