Last Updated:
சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கை எலும்பு முறிவு காரணமாக நடப்பு தொடரிலிருந்து விலகியதாக அணியின் பயிற்சியாளர் பிளெம்மிங் தெரிவித்தார். இதனால் சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனாகி உள்ளார் எம்.எஸ்.தோனி.
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ள நிலையில், அது ஏன் என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் எம்.எஸ்.தோனி. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் சென்னை ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கை எலும்பு முறிவு காரணமாக நடப்பு தொடரிலிருந்து விலகியதாக அணியின் பயிற்சியாளர் பிளெம்மிங் தெரிவித்தார். இதனால் சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனாகி உள்ளார் எம்.எஸ்.தோனி.
இந்நிலையில், அணியில் இருந்து விலகும் முன் ருதுராஜ் கெய்க்வாட் ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “எதிர்பாரா விதமாக உண்டான காயத்தால் மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கேவுக்காக ஆட முடியாதது வருத்தம்தான். இதுவரை நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. சில போட்டிகளில் சிஎஸ்கே தடுமாற்றத்துடன் செயல்பட்டிருக்கிறது.
ஆனால், தற்போது ஒரு இளம் விக்கெட் கீப்பர் அணியை வழிநடத்தவிருக்கிறார். அதனால், எல்லாம் மாறும் என நம்புவோம். இப்படியான சூழ்நிலையில் இருந்து அணியை கட்டாயம் மீட்க வேண்டுமென நினைத்தேன். ஆனால், விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. தற்போது தொடரில் இருந்து விலகினாலும், அணிக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில் இங்கே தொடர்ந்து இருக்க விரும்புகிறேன். டக் அவுட்டிலிருந்து அணிக்கு ஆதரவளிக்க காத்திருக்கிறேன்.” என்றார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 11, 2025 9:20 AM IST


